வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், வல்லரசு நாடாக உருவாக வேண்டும் என முயற்சி செய்யும் சீனாவிற்கும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வர்த்தகப் போர் வெடித்து வருகிறது. சீனா அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பையும், வர்த்தக வாய்ப்பையும் பறித்துக்கொள்கிறது என்று டிரம்ப் துவங்கி பிரச்சனை தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு விஷயமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவிற்குப் போட்டியாகச் சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதீத வரி விதித்து வருகிறது. இந்த முறை 75 பில்லியன் டாலர் பொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதால் பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா - சீனா
அமெரிக்கா தொடர்ந்து சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும், சேவைக்கும் அதிகளவிலான வரி விதித்து அமெரிக்கர்கள் சீனாவை ஒட்டுமொத்தமாகத் தவிர்க்கும் வகையில் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இதேபோல் சீனாவும் அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிரான வர்த்தகச் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. இருநாடுகளுக்கும் மத்தியில் தற்போது பாதிப்பு, மக்கள் நலன் ஆகியவற்றைத் தாண்டி ஈகோ பிரச்சனை பெரியதாக உள்ளது. யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்பது தான் இந்த வர்த்தகப் போர்.
வெள்ளிக்கிழமை
இந்நிலையில் அமெரிக்காவிற்கு எதிராகச் சுமார் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவை மீது சீனா டிரம்ப் அரசு அறிவித்தற்கு இணையாக வரி விதித்துள்ளது.
இப்புதிய வரி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது சீன அரசு. மேலும் இது செப்டம்பர் 1 மற்றும் டிசம்பர் 15 முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது. சீனா அறிவித்துள்ள 5 முதல் 10 சதவீத வரி சுமார் 5,078 பொருட்கள் மீது விதிக்கப்பட உள்ளது.
டிசம்பர் 15
இந்தியாவில் ரத்தவெள்ளமாக மாறிக்கிடக்கும் ஆட்டோமொபைல் துறையில், சீனாவில் அமெரிக்கா மகிப்பெரிய வர்த்தகத்தைச் செய்து வருகிறது.
இந்த வர்த்தகத்தைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கார்களுக்குக் கூடுதலாக 25 சதவீத வரியும், ஸ்பேர் பார்ட்ஸ்-க்கு கூடுதல் 5 சதவீத வரியும் விதிக்கப்பட்டு உள்ளது. இது டிசம்பர் 15 முதல் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு இதுவரை சீனாவின் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு வரி விதித்துள்ள நிலையில் அடுத்தச் சில மாதங்களில் மீதமுள்ள 300 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களுக்கு வரி வதிக்க முடிவு செய்துள்ளது.
சீனா 120 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களுக்கு மட்டுமே வரி விதித்துள்ளது. ஆயினும் டிரம்புக்கு ஈகோ தீர்ந்தபாடு இல்லை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications