ரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தொடர்ந்து கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வரும் அரசின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா, கிட்டதட்ட கடந்த ஏழு மாதங்களாக விமான எரி பொருளுக்கான நிலுவைத் தொகையை செலுத்த வில்லை என்பதால், எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் சப்ளையை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில் இந்த நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையான 4,500 கோடி மதிப்பிலான கடனுக்கு, 60 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முன் வந்துள்ளதாம்.

ரூ.4,500 கோடி கடனுக்கு வெறும் ரூ.60கோடி தான்.. கடுப்பில் எண்ணெய் நிறுவனங்கள்!

இந்தியன் ஆயில் கார்ப், மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் நிறுவனம், ஏர் இந்தியாவின் கொச்சின், புனே, பாட்னா, ராஞ்சி, விசாக், மொகாலி உள்ளிட்ட விமான நிலையங்களில் செயல்படும் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருளை நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த எரிபொருளுக்கான கட்டணத்தை இந்த விமான நிறுவனம் 90 நாட்கள் அவகாசத்தில் செலுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது இந்த நிறுவனம் 200 நாட்களுக்கு மேல் ஆகியும், இதுவரை கடனை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த நிலையிலேயே எண்ணெய் நிறுவனங்கள் எரி பொருளை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் கொடுமை என்னவெனில், 4,500 கோடி ரூபாய் கடன் பாக்கி உள்ள நிலையில், வெறும் 60 கோடி ரூபாயை இந்த நிறுவனம் 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் கொடுக்க முன்வந்துள்ளது தான். இதனால் கடுப்பில் உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.

இந்த பிரச்சனையால் மேற்கொண்டு எரிபொருளை வாங்க முடியாத இந்த நிறுவனம், தற்போது மேல் குறிப்பிட்ட 6 விமான தளங்களில் விமான சேவையை நிறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விமானத் துறை அதிகாரிகள் வட்டாரத்தில், நாங்கள் கடன் பிரச்சனையில் தான் உள்ளோம். ஆனால் இந்த கடன் பிரச்சனை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் எங்களது செயல்பாடுகள் முன்பை விட தற்போது நன்றாக போக ஆரம்பித்துள்ளது.

இதனால் செயல்பாட்டு லாபமும் கடந்த ஆண்டை விட, தற்போது லாபமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் இது போன்ற சமயத்தில் இந்த கடன் பிரச்சனை பிரச்சனையால், செயல்பாட்டை நிறுத்தியிருப்பது கவலையளிக்கிறது என்றும் கூறுகின்றனராம் விமான துறை அதிகாரிகள்.

தற்போது வரை ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 58,000 கோடி ரூபாய் கடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India offer Rs.60 cr for owes Rs.4,500-crore fuel dues

Air India offer Rs.60 cr for owes Rs.4,500-crore fuel dues
Story first published: Sunday, August 25, 2019, 7:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X