வீழ்ந்து கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு, ஏற்கனவே பல லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் பல லட்சம் பேர் வேலை இழக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரிந்து வரும் பொருளாரத்தை தூக்கி நிறுத்த அரசு எந்தவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் பாதாளம் நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆட்டோமொபைல் துறையில் நிலவி வரும் தேக்க நிலையினை பற்றிய, ஏதேனும் சாத்தியமான கருத்துகள் வந்திராதா என்றும் எதிர்பார்க்கும் தருணத்தில், நம் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை குறித்து, அதை தாங்கள் மிக வரவேற்பதாக கூறியுள்ளனர் ஆட்டோமொபல் துறையின் முக்கிய உயர் அதிகாரிகள்.

இந்த நிலையில் இந்த நடவடிக்கைகளை ஒரு சாரர் சாடினாலும், ஆட்டோமொபைல் துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் இதை வரவேற்பதாகவே கூறியுள்ளனர்.
நீடித்து வரும் பொருளாதார மந்த நிலையால், ஆட்டோமொபைல் தேவை குறைந்துள்ள நிலையில், இந்த பெரும் சரிவையே சந்தித்து வருகின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இனி அரசு நிறுவனங்களில் உள்ள பழைய வாகனங்களை மாற்றி புது வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார், இதனால் தற்போது ஆட்டோமொபைல் துறையினருக்கு ஏற்படும் அதிகப்படியான வீழ்ச்சி தடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வங்கிகளிலும், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் கடன் எளிதில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தவிர வாகன கடனுக்கான வட்டியும் குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வரும் 2020 மார்ச்31க்கு முன் வாங்கப்படும் Bharat Stage IV எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும். பிஎஸ் 6 எஞ்சின் மாசு விதிகள் அமலுக்கு வந்த பிறகு, Bharat Stage IV எஞ்சின் வாகனங்களை இயக்குவது சட்டத்திற்கு புறம்பானதாக மாறிவிடும் என்ற யூகங்களை மாற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, வாகனத் துறையில் தேவையை அதிகரிக்கும் வகையில் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாகவும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கைகளை ஒரே அடியாக ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்தா விட்டாலும், தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல, இந்த நிறுவனங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடாலமே தவிர, இது இதற்கான தீர்வல்ல என்றும், இத்துறை சார்ந்த நிபுனர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications