டெல்லி : அதிகளவிலான அன்னிய முதலீடுகளுக்கான வரி மற்றும் சர்சார்ஜ்கள் இந்தியாவில் அதிகம் என்பதாலும், இது குறித்த மாற்றம் கடந்த பட்ஜெட்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதும் இல்லாத நிலையில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அன்னிய முதலீடுகளை அதிகரிக்க சில வரிச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் பங்குகள் பரிமாற்றம் செய்வதன் மூலமோ அல்லது ஒரு நிறுவனத்திலோ, வணிக அறக்கட்டளையிலோ பரிமாற்றம் செய்யப்படும் போது எழும், நீண்டகால மற்றும் குறுகிய கால ஆதாயங்களின் மூலம் ( 115AD கீழ்), செலுத்த வேண்டிய வரி திரும்ப பெறப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது தவிர மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு நிதித்துறை விதித்த கூடுதல் கட்டணத்தை (Act (2) of 2019) திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, அன்னிய முதலீடுகள் அதிகரித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்ற நிலையில், முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும், அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், இந்த வரி குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் அன்னிய முதலீட்டாளர்களின் பார்வையில் பெரும் சுமையாகவே கருதப்பட்ட வந்த வரியானது, தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வரி குறைப்பு நடவடிக்கை, அன்னிய முதலீட்டாளர்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதாமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கு உதவுகிற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு தற்போது எடுத்து வருகிறது, இந்த நிலையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கிலேயே அரசு இது போன்ற பல சலுகைகளை அறிவித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இது தவிர ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, முதலீட்டாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஏஞ்சல் வரி விதியை திரும்ப பெறவும் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பிரச்சினைகளை கவனித்து, அதற்காக பிரச்சனைகளையும் களைந்து சரியான தீர்வு காண்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் தலைமையில் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications