டெல்லி : ரயில்வே துறையில் நிலவும் மந்த நிலையை போக்கவும், வருவாயை அதிகரிக்கவும் ரயில்வே துறை அதிரடியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, இந்த நிலையில் ஏசி நாற்காலி ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக சதாப்தி, கதிமான், தேஜஸ் மற்றும் பிற ரயில்களில் உள்ள ஏசி நாற்காலி ரயில்ளுக்கான டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது இருக்கை வசதியை மேம்படுத்துதல் மற்றும் குறைந்த கட்டண போக்குவரத்தை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
எனினும் அடிப்படை கட்டணத்தில் 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்றாலும், முன்பதிவு கட்டணம், சூப்பர்ஃபாஸ்ட் கட்டணம் மற்றும் GST தனித்தனியாக விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது ரயில்வே துறை.
இது முந்தைய ஆண்டில் மாதாந்திர ரயில்களில் பாதியளவு மட்டும் பயணிகள் பயணித்த ரயிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும், முந்தைய ஆண்டில் பாதியளவுக்கும் கீழ் பயணித்த ரயில்களில், மக்கள் இந்த தள்ளுபடிகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இதனுடன் சேர்த்து ரயில்களுக்கு கேட்டரிங் தேர்வு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்தான அறிக்கையில், அனைத்து மண்டல ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களிடம் தள்ளுபடி கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் சதாப்தி, தேஜஸ், கேட்டிமன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில், டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க, கட்டணத்தில் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்க ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் இந்த திட்டமானது, ஆக்கிரமிப்பு மற்றும் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதே நேரம் சென்னை சென்ட்ரல் முதல் - மைசூரு வரையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ், அஹமதாபாத் - மும்பை வரையிலான மத்திய சதாப்தி ரயில், ஜல்பைகுரி - ஹவுரா சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று ரயில்களிலும் தற்போதுள்ள தள்ளுபடி திட்டம் அப்படியே இருக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறப்பட்டுள்ளது. எப்படியோ மக்களுக்கு உபயோகப்படும் படியாக இருந்தால் நல்ல விஷயம் தானே.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications