டெல்லி: டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது இந்திய வங்கிகள் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிக் கொண்டு இருக்கிறார். அதில், வங்கிகள் இணைப்பு மிகவும் முக்கியமான விஷயமாக பேசி இருக்கிறார்.
குறிப்பாக இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 27 வங்கிகளாக இருந்த வங்கிகள் அனைத்து முறையாக திட்டமிட்ட படி இணைக்கப்பட்டால் இந்தியாவில் இனி 12 பொதுத் துறை வங்கிகள் மட்டுமே இருக்கும் எனவும் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

எந்த வங்கிகள், எந்த வங்கிகள் உடன் இணைக்கப்படுகிறது என்கிற விஷயத்தைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியில் தான் இருக்கிரோம். இருப்பினும், ஏர்கனவே ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா குழும வங்கிகள் மற்றும் பேங்க் ஆஃப் பரோடா, விஜயா பேங்க், தேனா பேங்க் இணைக்கப்பட்டது.
இந்த இணைப்பினால் நமக்கு என்ன நன்மை கிடைத்தது என ஒரு தனி ஸ்லைட் போட்டு விளக்கி இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வங்கிகள் இணைப்பால்
1. நிறைய சேவைகள் வழங்க முடிந்து இருக்கிறது
2. வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தாற் போல சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
3. இன்னும் சிறப்பாகச் செயல்பட முடிந்து இருக்கிறது
4. ஊழியர்களுக்கு என்ன சிறப்பாக செய்ய முடியுமோ, அவைகள் நன்றாக செய்ய முடிந்திருக்கிறது
5. நிறைய அலுவலகம் பணிகள் சார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை, வியாபாரம் பார்க்க வைத்திருக்கிறது.
6. சில்லறை வியாபாரம் ஜூன் 2018-ல் 93,000 கோடி ரூபாயில் இருந்து, ஜூன் 2019-ல் 1,12,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது.
7. காஸா விகிதம் ஜூன் 2018-ல் 2.69 லட்சம் கோடி இரூபாயில் இருந்து ஜூன் 2019-ல் 2.87 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
8. மார்ச் 2019-ல் மூன்று வங்கிகளும் சேர்த்து 7,113 கோடி ரூபாயை நட்டம் காட்டினார்கள். தர்போது ஜூன் 2019 கலாண்டில் 710 கோடி ரூபாய் லாபம் காட்டி இருக்கிறார்கள்.
8. மூன்று வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின் அதன் சந்தை மதிப்பு வரும் ஆகஸ்ட் 2020-க்குள் சுமார் 51,000 கோடி ரூபாயைத் தொடும் என்கிற ப்ளூம்பெர்க்கின் கணிப்பைக் குறிப்பிட்டு இருக்கிறார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஆக இதே போல எல்லா வங்கிகளும் இணைந்து நல்ல லாபத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறது அரசு. நம்மைப் போன்ற சாமானிய மக்களுக்கு நல்லது நடந்தால் சரி தான் மேடம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications