நம் தமிழகத்தைச் சேர்ந்த ரமணம் என்கிற வியாபாரி மதுரையைச் சேர்ந்தவர். இவர் நவம்பர் 2016 காலங்களில் டீமானிட்சைசேஷனால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்.
இவர் கடந்த 30 டிசம்பர் 2016 அன்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் திருப்பூர் கிளையில் தன்னுடைய 1.17 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்ய முயற்சித்து இருக்கிறார்.
தமிழ் நாடு மெர்கண்டைல் வங்கியின் திருப்பூர் கிளை அதிகாரிகளோ ரமணன் வைத்திருந்த 1.17 கோடி ரூபாய் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்கள்.
காசோலை பிரச்னை
ஏகப்பட்ட சக வியாபாரிகள், பொருள் கொடுத்தவர்கள், கடன் கொடுத்தவர்களுக்கு என பலருக்கும் பணம் கொடுக்க வேண்டும். ஆகையினால் பணத்தை வாங்கிக் கொள்ளச் சொல்லிக் கேட்டு இருக்கிறார். ஆனாலும் வங்கி அதிகாரிகள் வாங்கிக் கொள்ளவில்லை. அப்போதே வங்கி உயர் அதிகாரிகள் தொடங்கி, ஆர்பிஐ வரை பலருக்கும் கடிதம் எழுதி, பணத்தை டெபாசிட் செய்ய என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு இருக்கிறார்.
ஆர்பிஐ பதில்
கடந்த மாதம் நம் தமிழக வியாபாரி கே ரமணணுக்கு மத்திய ரிசர்வ் வங்கியில் இருந்து பதில் கடிதம் வந்து இருக்கிறது. மன்னிக்கவும் ரமணன் சார் நீங்கள் உங்கள் 1.17 கோடி ரூபாய் பணத்தை இனி எந்த வங்கிகளிலும் டெபாசிட் செய்ய முடியாது. பழைய பணத்துக்கு புதுப் பணத்தை மாற்றிக் கொடுக்க முடியாது, என பணிவாக பதில் சொல்லி இருக்கிறார்கள். 100, 200 என்றால் பரவாயில்லை. அப்படியே விட்டு விடலாம். ஆனால் 1.17 கோடி ரூபாய் ஆயிற்றே...? எப்படி விடுவது..?
கால அவகாசம்
நவம்பர் 08, 2016 அன்று மாலை நம் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் இருக்கும் பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது எனச் சொல்லி அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்தார். அதன் பின் மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்ய கால அவகாசம் கொடுக்கப்படும் எனச் சொன்னார். ஆனால் டிசம்பர் 30, வரை தான் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. சரி ரமணன் விஷயத்துக்கு வருவோம்.
வழக்கு
இப்போது வழக்கு உச்ச நீதிமன்றம் வரைச் சென்று இருக்கிறது. என் வியாபாரம் சம்பந்தமாக பலருக்கு பல செக்குகளைக் கொடுத்து இருந்தேன். அதற்கு எல்லாம் வங்கியில் பணம் இருந்தால் தானே செக் வழியாக சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். அதனால் தான் பணம் போடப் போனேன். இப்போது என் பணத்தை டெபாசிட் செய்ய முடியாமல், ஏகப்பட்ட செக் மோசடி வழக்குகள் என் மீது இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்.
நோட்டீஸ்
உச்ச நீதிமன்றமோ நம் தமிழக வியாபாரியான கே ரமணன் மற்றும் அவருக்கு எதிரான வாதங்களை கேட்டு இருக்கிறது. ரமணன் தரப்போ தன் பழைய ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு புதிய நோட்டுக்களைத் தர உச்ச நீதிமன்றம் வழி செய்ய வேண்டும் என்கிறது. உச்ச நீதிமன்றமோ இப்போது அரசுக்கு இந்த விஷயம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறதாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications