நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாக்ஸி சேவை அளிக்கும் மீரு நிறுவனத்தில் சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதன் மூலம் ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்திற்குள் பிற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல ஆனந்த் மஹிந்திரா தலைமை வகிக்கும் மஹிந்திரா நிறுவனமும் நுழைந்து இத்துறையில் தனது பயணத்தைத் துவங்கியுள்ளது.
மஹிந்திரா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் நீண்ட காலமாக ஆன்லைன் டாக்ஸி வர்த்தகத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்த நிலையில் சமீபத்தில் பல முன்னணி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கியது. இதன் பின்பு மஹிந்திராவும் இத்துறையில் இறங்க முதலீடு செய்துள்ளது.
தற்போது மீரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
55 சதவீத பங்குகள்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மீரு டிராவல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 55 சதவீத பங்குகளைச் சுமார் 201.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக மஹிந்திரா பங்குச்சந்தையில் சமர்பித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஒப்பந்தம்
இது மட்டும் அல்லாமல் இந்த முதலீட்டுக்குப் பின் மீரு நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் மஹிந்திரா நிறுவனத்தின் சார்பில் ஒரு நிர்வாக அதிகாரியை நியமிக்க இரு நிறுவனங்கள் மத்தியில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இணை நிறுவனம்
மஹிந்திரா, மீரு நிறுவனத்தில் 55 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் ஆதிக்கம் நிறைந்த நிர்வாக உரிமையைப் பெற உள்ளது. இதன் மூலம் மீரு டிராவல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனங்களான மீரு மொபிலிட்டி டெக் பிரைவேட் லிமிடெட், வி லிங்க் ஆட்டோமோடிவ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் வி லிங்க் பிலீட் சொல்யூன்ஷன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் இனி மஹிந்திராவின் இணை நிறுவனங்களாக இயங்கப்போகிறது.
மீரு நிறுவனம்
2006இல் துவங்கப்பட்ட மீரு நிறுவனம் 2018-19ஆம் நிதியாண்டில் 156.6 கோடி ரூபாய் அளவிலான வருவாய் பெற்றுள்ளது. இதே நிறுவனம் 2016-17இல் 277.2 கோடி ரூபாய் அளவிலான வருவாயை பெற்ற நிலையில், தொடர் வர்த்தக வளர்ச்சி மற்றும் வர்த்க போட்டியின் காரணமாக வருவாய் குறைந்துள்ளது.
முன்னணி நிறுவனங்கள்
இந்த வருடத்தின் துவக்கத்தில் தென்கொரிய நிறுவனங்களான ஹூன்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் சுமார் 300 மில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது.
தற்போது மஹிந்திரா டாக்ஸி வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications