இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளின் ஒன்றான ஐசிஐசிஐ தனது வங்கியியல் சேவையை மேம்படுத்த பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவைகளைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைந்த சேவைகளை ஐசிஐசிஐ வங்கிக்கு உருவாக்கி கொடுக்க விப்ரோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ், இன்போசிஸ் உடன் போட்டி போட்டு வரும் விப்ரோ நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ வங்கியின் சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
300 மில்லியன் டாலர்
விப்ரோ - ஐசிஐசிஐ வங்கி இடையில் நடந்துள்ள இந்த ஒப்பந்தம் 7 வருட காலத்திற்கானது என்றும், இதன் மதிப்பு 300 மில்லியன் டாலர் என்றும் மும்பை பங்குச்சந்தையில் விப்ரோ தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஐசிஐசிஐ வங்கிக்கு டிஜிட்டல் சேவை அளித்து வரும் வாரா இன்போடெக் நிறுவனத்தால் இச்சேவையைச் சரிவர அளிக்க முடியாத நிலையில் தற்போது இந்த ஒப்பந்தம் விப்ரோ நிறுவனத்திற்குக் கைமாறியுள்ளது.
321 கோடி ரூபாய்
ஐசிஐசிஐ வங்கி மற்றும் விப்ரோ நிறுவனங்கள் மத்தியில் நடைபெற்றுள்ள ஒப்பந்தம் மூலம் வாரா இன்போடெக் நிறுவனத்தின் 3800 ஊழியர்கள், இந்நிறுவனம் செயல்பட்டு வரும் பிராஜெக்ட்கள், அனைத்து சேவைகளையும், 321 கோடி ரூபாய்க்கு விப்ரோ வாங்கியுள்ளது.
இணை நிறுவனம்
இதன் மூலம் இனி வாரா இன்போடெக் விப்ரோ நிறுவனத்தின் இணை நிறுவனமாகச் செயல்பட உள்ளது. இந்த இணைப்பு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.221.5 கோடி வருவாய்
மேலும் வாரா இன்போடெக் தற்போது அளித்து வரும் வங்கி சேவைகள் மூலம் 2019ஆம் நிதியாண்டில் சுமார் 221.5 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் சரி வர தெரியாமல் இருக்கும் நிலையில் வாரா இன்போடெக் நிறுவனத்தை 321 கோடி ரூபாய்க்கு விப்ரோ வாங்கியுள்ளது.
இந்த நிறுவன கைப்பற்றலின் மூலம் விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை வர்த்தகத்தில் முக்கிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications