டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நிர்ணயித்துள்ள 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய மாநிலங்கள் தான் முக்கிய முகவர்களாக செயல்பட வேண்டும் என்று, நிதி ஆயோக்கின் தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
தொழில் துறை அமைப்பான PHDCCI ஏற்பாடு செய்திருந்த, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமிதாப், இந்தியாவைப் மிகச் சிறந்த பொருளாதார நாடாக மாற்றுவதற்கு, மாநிலங்கள் அனைத்தும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அமிதாப், பிரதமர் நரேந்திர மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதிலும் அடுத்து வரும் 2024ம் ஆண்டுக்கான பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்றும், இதே 2030ல் 10 டிரில்லியன் டாலர் என்றும் இலக்கு வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதை அடைய பல தடைகள் இருந்தாலும், மத்திய அரசுடன் மாநிலங்களும் இணைந்தால், அந்த இலக்கை கண்டிப்பாக நம்மால் அடைய முடியும் என்றும், இதற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியை இருமடங்காகவும், மும்மடங்காகவும் நோக்கமாகக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இதற்கு பரந்த அளவிலான துறைகளில் பெரிய கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக விவசாயம், லேபர் துறைகளை குறிப்பிட்டு காண்பித்த அவர், தற்போதைய இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2.7 டிரில்லியன் டாலர் என்றும், நமது இலக்கு அடுத்த சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மிக மந்த நிலையில் இருக்கும் பொருளாதாரம், இதனால் நலிவடைந்து வரும் பல துறைகள், குறிப்பாக ஆட்டோமொபைல் துறை, ஸ்டீல் துறை என தெரிந்தும் தெரியாமலும் பல துறைகள், நாளுக்கு நாள் நலிந்து கொண்டிருக்கு நிலையில் அவற்றை சீர் செய்தாலே, ஓரளவு நமது பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.
அதிலும் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் இருக்கும் நிலையில் பல நிறுவனங்கள் ஜி.எஸ்.டி பயந்தே மூடப்பட்டு விட்டன. ஆக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications