நாட்டின் பொதுத்துறை வங்கியும், முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் இனி வீட்டுக் கடன், வாகனக் கடன் இ.எம்.ஐ சற்று குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவிகிதத்திலிருந்து, 8.10 சதவிகிதமாக குறைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது கடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் களுக்கான வட்டி விகிதத்தை, ரெபோ விகிதத்தை 5.75 சதவிகிதத்திலிருந்து, 35 புள்ளிகள் குறைத்து, 5.40 சதவிகிதமாக குறைத்தது.
இது நடப்பு நிதியாண்டில் 4 வது முறையாக ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வட்டி விகிதத்தை, இர்சர்வ் வங்கியின் மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்டுடன் இணைத்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் வட்டி குறைப்பு செய்கிறதோ, அந்த வகையில், ஸ்டேட் பேங்க்கும் வட்டி குறைப்பை செய்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கியின் மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட்டுடன் இணைத்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி எப்போதெல்லாம் வட்டி குறைப்பு செய்கிறதோ, அந்த வகையில், ஸ்டேட் பேங்க்கும் வட்டி குறைப்பை செய்து வருகிறது.
அதேசமயம் வங்கிகளில் வைத்திருக்கும் வைப்பு நிதிக்கும் 20 - 25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிகளில் டெபாசிட் தொகை வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் இனி குறையும் என்றும் கூறப்படுகிறது.
மொத்த சந்தை பங்குகளில், எஸ்.பி.ஐயில் வீட்டுக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் முறையே 35 சதவிகிதம் மற்றும் 36 சதவிகிதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வட்டி குறைப்பினால் பெரும்பான்மையான மக்கள் பலன் பெறுவார்கள் என்றும் கருதப்படுகிறது. மேலும் முன்னதாக ஸ்டேட் பேங்க் அளித்திருந்த அறிக்கையில், இந்த செயல்பாடானது, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.