1. வரும் விஜய தசமியில் இருந்து வருமான வரித் துறையினரிடம் இருந்து வெறும் நோட்டீச்கள் அனைத்தும், இ நோட்டீஸ் ஆகத் தான் வரும். எனவே இனி கூடுமான வரை மனிதர்களிடம் நேரிட்டுப் பேசி தங்கள் வருமான வரி சார் விளக்கங்களைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது ஏற்றுமதி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்
2. சின்ன சின்ன வருமான வரி சார் பிரச்னைகள் மற்றும் தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படாது. எந்த தவறுகளுக்கு குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வருமான வரித் துறையின் உயர் அதிகாரிகள் குழு முடிவு செய்யும். இதுவும் ஏற்றுமதி செய்யும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்

3.Interest Equalisation Scheme வழியாக ஏற்றுமதியாளர்களுக்கு கொடுக்கும் கடனுக்கு 5 % வட்டி தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். பொதுவாக ஒரு நபருக்கு ஏற்றுமதி சார்ந்த ஆர்டர்கள் கிடைத்துவிட்டால் அந்த ஆர்டரைக் காட்டி வங்கிகளில் கடன் பெறலாம். அப்படி வாங்கும் கடனுக்கு 5 % தள்ளுபடி கொடுப்பது தான் இந்த Interest Equalisation Scheme.
4. முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்பட்டு ரீ ஃபண்ட் தொகைகளை விரைவாக வழங்கும் ஜிஎஸ்டி சிஸ்டம் இந்த மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும். எனவே விரைவில் ஏற்றுமதியாளர்கள் கையில் ஜிஎஸ்டி வரியாகச் செலுத்திய காசு கிடைக்கும்.
5.Remission of Duties or Taxes on Export Products (RoDTEP) என்கிற புதிய திட்டத்தின் படி தான் வரும் ஜனவரி 01, 2020 முதல் ஏற்றுமதி செய்யலாம். சுருக்கமாக இதுவரை ஏற்றுமதி செய்ய கூடுதல் வரி செலுத்த வேண்டிய பொருட்களுக்கு இனி வரி செலுத்தாமல் ஏற்றுமதி செய்யும் வகையில் அமையும். இதனால் மட்டும் அரசுக்கு சுமார் 50,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பாம்.
6. Export Credit Guarantee Corporation அமைப்பு வழியாக ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு இனி அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் வழங்கப்பட இருக்கிறதாம்.
7. துபாய் போல பெரிய ஷாப்பிங் மால்களைக் கட்டி ஏற்றுமதியை அதிகரிப்பது. குறிப்பாக ஆண்டுக்கும் ஒரு முறை இந்த ஏற்றுமதிக்கான ஷாப்பிங் திருவிழாவை நடத்த இருப்பது.
8. ஏற்றுமதியாளர்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்களில் இருக்கும் சலுகைகளை விளக்க வணிக அமைச்சகம், ஏற்றுமதி அமைப்பான FIEO - Federation of Import and Export Oganization உடன் சேர்ந்து ஏற்றுமதியாளர்களுக்கும் அந்த சலுகைகளைச் சொல்லி வழிகாட்டுவது.
9. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தை மேம்படுத்த பல டெக்னிக்கல் ஸ்டாண்டர்ட்களை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அப்போது தான் பொருளின் தரம், அதன் செயல்பாடுகள் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் போட்டிகளை எதிர் கொள்வது, தரக் குறைவான இறக்குமதிகளை எதிர்கொள்வது எல்லாம் செய்ய முடியும் எனச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications