ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்!

டெல்லி : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சற்று முன்பு நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில், 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்ற அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

11,52,000 ஊழியர்களுக்கு இந்த ரயில்வே போனஸ் வழங்க இருப்பதாகவும், இது தொடர்ந்து ஆறு வருடமாக கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்!

இது குறித்தான முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னரே செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து கூறுகையில், இது தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ரயில்வே ஊழியர்களுக்கு அளிக்கப்படும் போனஸ் என்றும், உற்பத்தித் திறன் ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு கிடைக்கும் வெகுமதி இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த அறிவிப்பின் மூலம் 11,52,000 ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக கிடைக்கும். எனவும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து கூறுகையில், இ-சிகரெட்டுகளைத் தடை செய்யப்படுவதாகவும், குறிப்பாக இளைஞர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஈ-சிகரெட்டுகள் பயன்பாடு குறையும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இ-சிகரெட்டுகளை தடை செய்வதவாகவும், அதாவது இ-சிகரெட்கள் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவை தடை செய்யப்படுவதாகவும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதன்படி 400 வகையான சிகரெட் பிராண்டுகளையும், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இவற்றில் யாவும் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை என்றும், இந்த இ-சிகரெட் 150 சுவைகளில் வருவதாகவும் கூறப்படுகிறது.

எனினும் இந்த இ-சிகரெட் ஆனது பட்ஜெட்டில் 2,028 கோடி ரூபாய் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், எனினும் மக்களின் நலன் கருதி இந்த அறிவிப்பை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை மறப்பதற்காக இ-சிகரெட் முறை கொண்டு வரப்பட்டது, ஆனால் இதற்கு அடிமையானவர்கள் இங்கு அதிகம் பேர் உள்ளனர் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+