டெல்லி : எந்த அறிக்கையாக இருந்தாலும் பொருளாதார மந்தம், பொருளாதார சரிவு, வேலையிழப்பு, வேலையின்மை என தொடரும் செய்திகள்.
மறுபுறம் கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சவுதி அராம்கோ தாக்குதல், ரூபாய் வீழ்ச்சி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் என இப்படி தொடரும் செய்திகளுக்கு மத்தியில் ஆய்வாளர்களின் கருத்து வேறு.

இந்த நிலையில் இதுவரை பல்வேறு ஆய்வாளர்கள் பலவாறு கருத்து கூறியிருந்தாலும், அவர்கள் அனவரின் ஒருமித்த கருத்தும், பொருளாதாரம் பின்னோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதே. இது ஒரு புறம் கவலை கொள்ளும் விதமாகவே இருக்கிறது என்றாலும், மறுபுறம், ஊழியர்களின் நிலை அதற்கு மேல்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த செய்தியொன்றில் இந்திய நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் இரவில் சரியான தூக்கமின்மை, பதற்றம், இரத்த அழுத்தம், வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தின் நடுவில், இப்படி ஒரு கடுமையான போக்குகளை சந்திப்பதாகவும், இவர்கள் நகரங்களில் உள்ள மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள், தற்போது அதிகம் வருவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை, அந்த வேலைகளை செய்து முடிப்பதற்கான இலக்கு, அடைய முடியாத இலக்குகள் மற்றும் கட்டணங்கள் உள்ளிட்ட சிலவற்றை பற்றி இவர்கள் அனைவரும் புகார் கூறுகிறார்களாம். அதிலும் கடந்த ஆறு மாதங்களில் வெளிவந்த ஆய்வுகள் ஊழியர்களிடம் மனச்சோர்வு மற்றும் கவலை தொடர்பான கோளாறுகள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக காஸ்மோஸ் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் நடத்திய ஒரு ஆய்வில், இந்த பாதிப்பானது மூத்த தொழில் வல்லுனர்களிடையே, மன நலத்தை சீரழிப்பதில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், ஊழியர்களின் மன அழுத்தம் தொடர்பான புகார்கள் 16 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் இவ்வாறு மன அழுத்தத்துடன் காணப்படுபவர்கள், குறிப்பாக நிதி சம்பந்தமான பிரச்சனை, வேலை போய்விடுமோ என்ற பயம், தொழில் நலிவடைந்து விடுமோ, பணம் போய்விடுமோ என்ற கவலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் சிலர் நிதிப் பிரச்சனையால் தற்கொலை வரைக்கும் கூட செல்கின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் ஊழியர்களிடம் இது குறித்தான விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகம் உள்ளது என்றும், அவர்கள் அதிகம் பேர் மனநல மருத்துவர்களை நாடி வருகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications