டெல்லி: இந்தியாவில் ஓடும் கார் மற்றும் வணிக வாகனங்கள் வாயிலாக ஏற்படும் மாசை கட்டுப்படுத்தும் விதமாகவும், பழைய வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாகவும் ஒரு புதிய விதிமுறையை, மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வரப் போகிறதாம்.
அது தான் வாகனங்களுக்கான மறு பதிவுக் கட்டணம் உயர்வு. இந்த புதிய மறு கட்டணப் பதிவு அநேகமாக வரும் ஜூலை 2020 முதல் அமலுக்குக் கொண்டு வர இருப்பதாக அதிகாரிகள் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.

Voluntary Vehicle Scrappage Policy என்கிற பெயரில் கொண்டு வரப்படும் திட்டங்களில், 15 வருட பழைய வாகனங்கள் பயன்பாட்டை குறைப்பதைத் தான் முதல் கொள்கையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறதாம். தற்போதைக்கு இந்த கொள்கை குறித்து அமைச்சரவைகளில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதுவரை இந்த கொள்கை விவரங்கள் பொது வெளியில் வரவில்லையாம். அவ்வளவு ஏன் இன்னும் கேபினெட் அனுமதி கூட வாங்கவில்லையாம்.
ஆனால் விரைவில் அனைத்து வேலைகளையும் முடித்து, கேபினெட் அப்ரூவல் வாங்கி, பொது வெளியில் விடப்படும் எனவும் சொல்கிறார்கள் விவரம் தெரிந்த அதிகாரிகள். இந்த புதிய கொள்கையால் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை மேம்படும் எனவும் நம்புகிறது அரசு. இந்த கொள்கைகளில் பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது வாகனங்கள் மறு பதிவு செய்து கொள்வதற்கான கட்டணங்கள் தான். தனியார் நான்கு சக்கர வாகனங்கள் மறு பதிவு செய்ய இப்போது 600 ரூபாய் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த புதிய நடைமுறைகள் படி 15,000 ரூபாய் வரை வசூலிக்க இருக்கிறார்களாம்.
அதே போல வணிக ரீதியிலான நான்கு சக்கர வாகனங்களுக்கு இப்போது மறு பதிவு செய்ய 1,000 ரூபாய் தான் கட்டணம். ஆனால் புதிய கொள்கைகள் படி 20,000 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்களாம்.
மீடியம் கண ரக வாகனங்களுக்கு இப்போது மறு பதிவு செய்ய 1,500 ரூபாய் தான் கட்டணம். ஆனால் புதிய கொள்கைகள் படி 40,000 ரூபாய் வசூலிக்க இருக்கிறார்களாம். ஒருவேளை, வாகனம் பதிவு செய்து 15 வருடங்களுக்குப் பிறகு, இவ்வளவு பெரிய தொகையைக் கட்டி பதிவு செய்யவில்லை என்றால், அந்த வாகனங்கள் தானாகவே வாகன பதிவேட்டில் இருந்து நீக்கப்படுமாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications