இந்திய ஸ்டார்ட்அப் துறையின் முதல் யூனிகார்ன் என்ற பெற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ-வான சச்சின் பன்சால் மீண்டும் ஒரு NBFC நிறுவனத்திற்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் Chaitanya Rural Intermediation Development Services Pvt. Ltd (CRIDS)என்ற ஒரு NBFC நிறுவனத்தில் 739 கோடி ரூபாய் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆகியுள்ளார்.
CRIDS வங்கி சேவை
CRIDS தற்போது இந்தியாவில் 5 மாநிலங்களில் வங்கி சேவை முழுமையாகக் கிடைக்காத மக்களுக்குச் சேவையை அளித்து வருகிறது. இந்நிறுவனம் இரு சக்கர வாகன கடன், வீட்டுக் கடன், சிறு தொழில்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகியவற்றை முக்கிய வர்த்தகமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
5 மாநிலம்
இந்நிறுவனம் இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வர்த்தகக் கிளையைக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் இந்நிறுவனத்தை ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி ஆகியோர் நிறுவினர்.
சச்சின் பன்சால் வங்கித்துறையில் முதல் முறையாக நுழைந்து உள்ள நிலையில் இத்துறையைப் பற்றி அறிந்துகொள்ளவும், CRIDS வர்த்தகத்தைப் பன்மடங்கு உயர்த்தவும் தான் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நிறுவனர்கள்
சச்சின் பன்சால் CRIDS வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனர்களான ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி வெளியேறுவார்கள் என நினைத்த போது, சச்சின் பன்சால் இருவரும் தற்போது இருக்கும் அதே பதவியில் தொடர்ந்து வேலை செய்வார்கள் எனத் தெரிவித்தார் சச்சின்.
ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி
சச்சின் பன்சாலின் வருகை இந்நிறுவனத்தைப் பல வழிகளில் வர்த்தக விரிவாக்கம் செய்ய முடியும், குறிப்பாக இணைய வங்கி சேவையில் விரிவாக்கம் செய்யச் சச்சின் பெரிய அளவில் உதவுவார் என ஆனந்த் ராவ் மற்றும் சமித் ஷெட்டி நம்புகின்றனர்.
பிளிப்கார்ட்
பிளிப்கார்ட் நிறுவனத்திலிருந்து 2018ஆம் ஆண்டு வெளியேறிய சச்சின் பன்சால் பிளிப்கார்ட் விற்பனைக்குப் பின்பு பல நூறு கோடிகளைப் பெற்றார். இப்பணத்தைப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இதன் ஒரு பகுதியாகத் தான் தற்போது ஆனந்த் ராவ், சமித் ஷெட்டி அவர்களின் CRIDS வங்கியில் முதலீடு செய்துள்ளார் சச்சின் பன்சால்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications