மும்பை: பயோ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடியும், அதோடு மற்றொரு பக்கம் அந்நிய செலாவணியையும் பெரிய அளவில் மிச்சம் பிடிக்க முடியும் எனச் சொல்லி இருக்கிறார் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி. இதை எல்லாம் விட மிக முக்கியமாக மோடியின் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கை இந்தியா அடைய முடியும் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.
எத்தனால் (ethanol) மற்றும் பியூட்டானோல் (butanol) போன்ற பயோ எரிபொருட்களை ஊக்குவிக்க தனது அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தி, வாகனங்களை வழக்கம் போல இயக்க முடியும். இந்த பயோ எரிபொருட்களை பல்வேறு உலக நாடுகளும் பயன்படுத்திக் கொண்டு இருக்கின்றன. அதோடு வாகனங்கள் வெளியிடும் கரியமில வாயுவின் அளவும் கணிசமாக குறையும் எனச் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மட்டுமே சுமார் 7 லட்சம் கோடி ரூபாயைச் செலவிடுகிறது. இந்த சூழ்நிலையில் கார்கள் மற்றும் விமானங்களில் பயன்படுத்தக் கூடிய எத்தனால் மற்றும் பியூட்டானோல் போன்ற மாற்று பயோ எரிபொருட்கள் பயன்படுத்தினால் நல்லது தானே. நாம் ஏன் அந்த மாற்று பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தக் கூடாது..? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்தனைக்கும் இந்த பயோ எரிபொருட்கள் வழக்கமான பெட்ரோல், டீசலை விட விலை குறைவானது என்றும் சொல்லி இருக்கிறார் நிதின் கட்கரி.
இந்தியாவின் விமானத் துறை மட்டும் சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஏர் டர்பைன் எரிபொருளை ஒவ்வொரு ஆண்டும் இறக்குமதி செய்கிறார்கள். இந்த துறை, பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், அது இந்தியாவில் சுமார் 40,000 கோடி ரூபாய் சந்தையை உள்நாட்டில் திறந்து விடும் எனச் சொல்லி இருக்கிறார்.

ஏற்கனவே விமானங்களில் பயோ எரிபொருட்களை, பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் விமானங்களில் இந்த பயோ எரிபொருட்களை பயன்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இந்தியாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனைப் போல பயோ எரிபொருட்களைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு ஏராளமான அந்நிய செலாவணி மிச்சமாகும் எனச் சொல்லி இருக்கிறார்.
அதோடு இந்தியாவில் நிலக்கரிக்கு பதிலாக நாபியர் புற்களை (Napier Grass) பயன்படுத்தவும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம். பொதுவாக நிலக்கரியை விட நாபியர் புற்கள் அதிக வெப்பம் உமிழும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதை எல்லாம் செய்தாலே, வரும் 2025-ம் ஆண்டுக்குள், நாம் எளிதில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற பிரம்மாண்ட் இலக்கை அடைந்து விட முடியும் எனச் சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

Strait of Hormuz: ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் கூட அனுப்ப முடியாது.. டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்த ஈரான் IRGC படை!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!



Click it and Unblock the Notifications