உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சவுதி அரசு இந்தியாவை மிகப்பெரிய அளவில் நம்புவதாகவும், இந்தியாவுடன் நீண்ட கால நட்புறவு மற்றும் வர்த்தகப் பங்கீட்டைக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியா இந்தியாவில் பெட்ரோ கெமிக்கல், இன்பராஸ்டெக்சர் மற்றும் சுரங்கம் ஆகிய துறையில் இந்த 100 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்துச் சவுதி அரேபியாவின் அம்பாசிட்டர் Dr Saud bin Mohammed Al Sati கூறுகையில், இந்தியா தற்போது எங்களின் முக்கியமான முதலீட்டுத் தளமாக உள்ளது. நாங்கள் இந்தியாவில் எண்ணெய், எரிவாயு மற்றும் சுரங்க துறையில் அதிகளவில் முதலீடு செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ விரும்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தற்போது அறிவித்துள்ள 100 பில்லியன் டாலர் என்கிற மிகப்பெரிய அன்னிய முதலீடு ரூபாய் மதிப்பையும் வர்த்தகச் சூழ்நிலையை மாற்றும், ஆனால் இந்த முதலீட்டால் அதிகம் லாபம் அடையப்போவது சவுதி அரேபியா தான் என்றால் மிகையில்லை.
இந்த 100 பில்லியன் டாலர் தொகை எனர்ஜி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல், இன்பராஸ்டக்சர், விவசாயம், கனிமம், மற்றும் சுரங்கம் ஆகிய 7 துறைகளில் பிரித்து முதலீடு செய்ய உள்ளதாகச் சவுதி கூறியுள்ளது. 100 பில்லியன் டாலர் முதலீட்டின் மூலம் நாட்டில் பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அஸ்திவாரமான பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகப் பிரிவிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 20 சதவீத பங்குகளைச் சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான ஆராம்கோ-விற்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு உள்ளார். இதுநாள் வரையில் முகேஷ் அம்பானி தான் இருக்கும் துறையிலும், நிறுவனத்திலும் தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அன்னிய நிறுவனத்திற்கு வழி விட்டுள்ளார்.

சவுதி ஆராம்கோ முதலீடும் செய்யும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 75 பில்லியன் டாலர் இந்நிலையில் ஆராம்கோ வாங்கும் 20 சதவீத பங்குகளின் மதிப்பு 15 பில்லியன் டாலர்.
இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட உள்ள 15 பில்லியன் டாலர் தொகையும் சவுதி அரேபியாவின் 100 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் அடக்கம்.
இதுநாள் வரையில் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு மிகவும் குறைந்த அளவீடாகவே இருந்த நிலையில் முதல் சவுதியின் 100 பில்லியன் டாலர் முதலீடு இந்திய கச்சா எண்ணெய் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றப்போகிறது.
சவுதி முதலீட்டுக்குப் பின் இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய் மக்களின் பயன்பாட்டிற்குத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
More From GoodReturns

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications