நடப்பு ஆண்டில் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 31 நாட்களில், 11 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால் பணத் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏனெனில் பண்டிகை காலத்தில், வங்கிகளுக்கு விடுமுறை என்பதாலும், இந்த காலத்தில் அதிக தேவை இருக்கும் என்பதால், பண நெருக்கடி ஏற்படலாம் என்றும், இதனால் மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஒரு புறம் இந்த விடுமுறை நாட்களில் பணப்பற்றாக்குறையை நீக்க, ஏடிஎம்களில் வழக்கம் போல பணம் நிரப்பப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டாலும், மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லதே.
இந்த அக்டோபர் மாதத்தில் காந்தி ஜெயந்தி தொடங்கி 2ம் தேதியே வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து அக்டோபர் 6,7 தேதிகளில் ஆயுத பூஜையை முன்னிட்டும், 8ம் தேதி தசரா பண்டிகையொட்டியும் வங்கிகள் விடுமுறை என்றும் கூறப்படுகிறது.
இது தவிர அக்டோபர் 12ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மற்றும் 13ம் தேதி ஞாயிற்றுகிழமையன்றும் விடுமுறை நாட்களாகும். மேலும் அக்டோபர் 20ம் தேதி மற்றும் 26ம் தேதி நான்காவது சனிக்கிழமையன்று, 27ம் தேதி தீபாவளி பண்டிகை எனவும், இதே 28 மற்றும் 29ம் தேதிகளில், வட மாநில பண்டிகையான கோவர்த்தன பூஜை மற்றும் பாய் தூஜ் எனப்படும் பண்டிகைகளால் விடுமுறை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பட்டியலில் தசரா, தீபாவளி மற்றும் இன்னும் பல விடுமுறைகளை சேர்த்து 11 நாட்கள் விடுமுறை என்றும் கூறப்படுகிறது. இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் இதனால் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன்னெச்சரிக்கையாக செலுத்தி விடலாம், ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஸ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில் அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம். ஆக மக்களே உஷாராயிருங்க..