இந்திய வங்கிகள் மிக பாதுகாப்பானவை.. ரிசர்வ் வங்கி ட்விட்டரில் அதிரடி!

இந்திய வங்கிகள் பாதுகாப்பானவையாகவும் நிலையானவையாகவும் உள்ளன என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கியின் பிரச்சனைக்கு பிறகு, கூட்டுறவு வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருப்பவர்களிடையே இது ஒரு பீதியை கிளப்பியுள்ளது.

இதனால் இந்திய வங்கிகள் பாதுகாப்பானாதாகவும் நிலையானதாகவும் உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களிடையே உறுதியளிக்க விரும்புகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகள் பாதுகாப்போடு தான் இருக்கிறது

இந்திய வங்கிகள் பாதுகாப்போடு தான் இருக்கிறது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தம் வகையில் வதந்தி பரப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய வங்கிகள் பாதுகாப்புடனும் நிலைத்தன்மையோடும் உள்ளன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆக மக்கள் எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும், இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம் எனவும், யாரும் இந்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

முன்னரே எச்சரிக்கை

முன்னரே எச்சரிக்கை

இதற்கு முன்பாக சில நாட்களுக்கு முன், கடந்த செப்டம்பர் 26ம் தேதியும் இதே போன்ற எச்சரிக்கை அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதைக் கருத்தில் கொண்டு மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பஞ்சாப் அன்ட் மும்பை கூட்டுறவு வங்கியின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் பிஎம்சி வங்கி 4,355 கோடி ரூபாய் கடனை வரம்பு மீறி வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.

பி.எம்.சிக்கு கடிவாளம்

பி.எம்.சிக்கு கடிவாளம்

மேலும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வங்கியை புதுபிக்கவோ அல்லது எந்த வழங்கலும், முதலீடும் செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது, முன்பு தினசரி ஒரு வாடிக்கையாளர் 1000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கொள்கையினை தளர்த்தி, தற்போது பி.எம்.சி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கிலிருந்து தினசரி 10,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட்

ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட்

மக்களின் பணத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய வங்கிகளே இப்படி இருக்கலாமா? என்று பலர் ட்விட்டரில் கருத்து பரப்பி வருவதையடுத்து, நமது பேங்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானது தான், ஆனால் அதில் செய்யப்படும் டெபாசிட்கள் தான் காணமல் போய்விடுகின்றன. ஏதோ சினிமா கதைகளில் வருவது போல ஆப்ரேஷன் சக்ஸஸ், பேஷன்ஸ் டெட் என்பது போல இருக்கிறது என்றும் ட்விட்டரில் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+