இந்திய வங்கிகள் பாதுகாப்பானவையாகவும் நிலையானவையாகவும் உள்ளன என்று ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் யாரும் இதுகுறித்து பீதியடைய வேண்டாம் எனவும் கூறியுள்ளது.
பஞ்சாப் & மும்பை கூட்டுறவு வங்கியின் பிரச்சனைக்கு பிறகு, கூட்டுறவு வங்கிகளின் வைப்பு நிதி வைத்திருப்பவர்களிடையே இது ஒரு பீதியை கிளப்பியுள்ளது.
இதனால் இந்திய வங்கிகள் பாதுகாப்பானாதாகவும் நிலையானதாகவும் உள்ளன என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களிடையே உறுதியளிக்க விரும்புகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் ரிசர்வ் வங்கி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய வங்கிகள் பாதுகாப்போடு தான் இருக்கிறது
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல வங்கிகளின் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தம் வகையில் வதந்தி பரப்பப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய வங்கிகள் பாதுகாப்புடனும் நிலைத்தன்மையோடும் உள்ளன என்பதை பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆக மக்கள் எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் எனவும், இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம் எனவும், யாரும் இந்த வதந்திகளுக்கு இரையாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
முன்னரே எச்சரிக்கை
இதற்கு முன்பாக சில நாட்களுக்கு முன், கடந்த செப்டம்பர் 26ம் தேதியும் இதே போன்ற எச்சரிக்கை அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதைக் கருத்தில் கொண்டு மீண்டும் இப்படி ஒரு அறிவிப்பை ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பே மும்பை காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு பஞ்சாப் அன்ட் மும்பை கூட்டுறவு வங்கியின் மூத்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தது. மேலும் பிஎம்சி வங்கி 4,355 கோடி ரூபாய் கடனை வரம்பு மீறி வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது ரிசர்வ் வங்கி.
பி.எம்.சிக்கு கடிவாளம்
மேலும் ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வங்கியை புதுபிக்கவோ அல்லது எந்த வழங்கலும், முதலீடும் செய்யவோ கூடாது என ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது, முன்பு தினசரி ஒரு வாடிக்கையாளர் 1000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்ற கொள்கையினை தளர்த்தி, தற்போது பி.எம்.சி வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கிலிருந்து தினசரி 10,000 ரூபாய் வரை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரேஷன் சக்சஸ் பேஷன்ட் டெட்
மக்களின் பணத்திற்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய வங்கிகளே இப்படி இருக்கலாமா? என்று பலர் ட்விட்டரில் கருத்து பரப்பி வருவதையடுத்து, நமது பேங்கிங் சிஸ்டம் மிக பாதுகாப்பானது தான், ஆனால் அதில் செய்யப்படும் டெபாசிட்கள் தான் காணமல் போய்விடுகின்றன. ஏதோ சினிமா கதைகளில் வருவது போல ஆப்ரேஷன் சக்ஸஸ், பேஷன்ஸ் டெட் என்பது போல இருக்கிறது என்றும் ட்விட்டரில் கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications