இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.1% தான்.. ஆர்.பி.ஐ மதிப்பீடு!

டெல்லி : பலவீனமான தேவைகள் மற்றும் உள்நாட்டு தேவை நிலைமைகள், தனியார் முதலீடுகள் குறைந்துள்ளது என இவற்றின் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு இன்று இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6.1% மாக குறைத்துள்ளது. இது முன்னர் 6.9% மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரிசர்வ் வங்கி கூறுகையில், பல விதமாக குறியீடுகள் உள்நாட்டு தேவை நிலைமைகள் மிகப் பலவீனமாக உள்ளன என்றும் கூறியுள்ளது. மேலும் தொழில்துறை குறித்த குறியீடானது முடக்கப்பட்ட நிலையில், மூன்றாவது காலாண்டிலும் மந்த நிலையிலேயே காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 6.1% தான்.. ஆர்.பி.ஐ மதிப்பீடு!

எனினும் இந்தக் குழு, அண்மையில் மத்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால், தனியார் நுகர்வு வலுபடுத்தவும், முதலீட்டு நடவடிக்களை ஊக்குவிக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை மீட்டெடுக்க, இன்னும் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் இந்த குழு கூறியுள்ளது. குறிப்பாக அரசு கடந்த செப்டம்பர் மாதத்தில் ஏற்கனவே இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி விகிதம், 30%லிருந்து 22 சதவிகிதமாக குறைத்தது, இதே புதிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் 15%மாக குறைத்தது நினைவு கூறத்தக்கது.இது போன்ற நடவடிக்கைகள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் 2019 - 2020ம் ஆண்டில் மீதமுள்ள காலகட்டத்தில் பணவீக்கம் குறிப்பிட்ட இலக்குக்கு கீழ் இருக்கும் என்றும், மேலும் உள்நாட்டு வளர்ச்சியில் வளர்ச்சி காணும் போது இந்த பிரச்சனைகள் கட்டுக்குள் வரும் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.

மேலும் வளர்ச்சியை புதுப்பிக்கும் நோக்கில் தான் ஆர்.பி,ஐ இப்படி ஒரு வட்டி குறைப்பை மேற்கொண்டுள்ளது என்றும், பணவீக்கமும் இந்த நடுத்தர காலத்தில் 4%மாக இருக்கும் என்பதையும் ஆர்.பி.ஐ உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் காலாண்டிற்கான நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ) மதிப்பு 3.4 சதவிகிதமாக திருத்தப்பட்டாலும், அது இரண்டாவது பாதியில் 3.5 - 3.7 சதவிகிதமாக இருக்கும் என்றே மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆர்.பி.ஐ கடந்த பிப்ரவரி மாததில் இருந்து தற்போது வரை தளர்த்தப்பட்ட, கொள்கை தளர்த்தலின் தாக்கம் படிப்படியாக பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இது தேவையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இது தவிர கடந்த இரண்டு மாதங்களாக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டு வரும் புதுபித்தல் நடவடிக்கைகள் மேலும் தனியார் நுகர்வுகளை ஊக்குவிக்கும் என்றும், இதனால் தேவை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆர்.பி.ஐ கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+