டெல்லி : ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைகால டிவிடெண்ட் நிதியாக மத்திய அரசு 30,000 கோடியை கேட்டதாக செய்திகள் வெளியானதையடுத்து, இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது எனவும், மாறாக இதை பற்றிய செய்திகள் வெளியானதை பார்த்து தான், தானும் தெரிந்து கொண்டதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
ஏற்கனவே மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை கொடுக்க ரிசர்வ் வங்கி ஒத்துக் கொண்டுள்ள நிலையில், இப்படி சர்ச்சையான கருத்து வெளியாகியுள்ளது.

இந்த நிதி தருவதாக ரிசர்வ் வங்கி ஒப்புக் கொண்டதற்கு, பல தரப்பிலும் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அவசர கால நிதியாக வைத்திருக்கும் இந்த உபரி நிதியை ரிசர்வ் வங்கி இப்போது செலவளித்து விட்டால், அதை எப்படி அவசரகாலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டு வந்தது.
மேலும் நாட்டின் நிதி நிலையை வலுவாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி தமது கையிருப்பை வலுப்படுத்தி வருகிறது. ஆனால் தேவையான அளவிலை விட அதிகமான உபரி நிதியை ரிசர்வ் வங்கி வசம் வைத்திருப்பதாகவும், அந்த நிதியை அரசுக்கு வழங்கினால் பயனுள்ள வகையில் திட்டங்களைச் செயல்படுத்த உதவும் எனவும் கூறப்பட்டது.
முன்னதாக அரசு பல்வேறு வரிகுறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க வேறு வழிகளைத் திட்டமிட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து இடைக்கால டிவிடெண்டாக 30,000 கோடி ரூபாயை மத்திய அரசு கேட்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில் இதுபற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், இது பற்றி நானும் செய்திகளில் பார்த்தேன், எனக்கு தெரிந்து இப்படி ஒரு இடைக்கால நிதியை அரசு கேட்டதாக எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பிமால் ஜலானி தலைமையிலான குழு ஆராய்ச்சி செய்து அரசுக்கு இவ்வளவு நிதியை கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், இப்படி ஒரு செய்தி வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications