ஐ.டி துறையில் முன்னணி நிறுவனமான ஆரக்கிள் நிறுவனம் தனது போட்டியாளர்களை தோற்கடிப்பதற்காக, உலகெங்கிலும் தனது சேவைகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன் படி இந்தியாவில் கூடுதலாக 2,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ.டி துறையில் குறிப்பாக கிளவுட் கம்பியூட்டிங் துறையில் முன்னேற்றத்தினை காணவும், அதன் போட்டி நிறுவனங்களான அமேசான் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்களுடன் போட்டியிடவும் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த ஆண்டு நிதி விற்பனை மற்றும் பிற செயல்பாடுகளுக்கான ஆரக்கிளின் வணிக மென் பொருளை புதிய அமைப்புகளுக்கு மாற்ற உதவும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சியாட்டில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி மற்றும் இந்தியாவில் உள்ள ஆரக்கிளின் மென்பொருள் மேம்பாட்டு மையங்களிலும், புதிய தரவு மையங்களிலும் வேலைகள் சேர்க்கப்படும் என்றும் ஆரக்கிள் கிளவுட் உள் கட்டமைப்பு பிரிவின் நிர்வாக துணைத் தலைவர் டான் ஜான்சான் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஆரக்கிள் நிறுவனம் 20 கிளவுட் கம்பியூட்டிங் மையங்கள் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் தற்போது 16 இடங்களில் உள்ளது என்றும், இதில் ஒரு டஜன் கடந்த ஆண்டில் திறக்கப்பட்டது என்றும், சிலி, ஜப்பான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஐரோப்பாவின் பிற இடங்களிலும் புதிய இடங்கள் கட்டப்படும் என்றும் கருதப்படுகிறது.
கடந்த மே 31 வரை, ஆரக்கிள் நிறுவனம் சுமார் 1,36,000 முழு நேர ஊழியர்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 18,000 பேர் கிளவுட் கம்பியூட்டிங் சேவைகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஆரக்கிள் அதன் இரண்டாவது தலைமுறையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, இப்படியொரு ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது இந்த நிறுவனம்.
ஒரு புறம் பொருளாதார மந்த நிலையால் பலர் வேலையிழப்புகளை சந்தித்து வந்தாலும், மறுபுறம் இது போன்ற பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது. இது போன்ற பல புதிய வாய்ப்புகளை பயன் படுத்த இத்துறை சார்ந்த, ஊழியர்கள் தங்களின் அறிவைப் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications