டெல்லி : ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரோமோட்டர் சிவிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் மல்விந்தர் சிங், ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் சிஎம்டி சுனில் கோத்வானி உள்ளிட்ட மூவருக்கும் எதிராக, ரெலிகேர் நிறுவனம் எஃப்.ஐ.ஆர் செய்துள்ளது.
இவர்கள் மூவரும் 10 ஆண்டுகளில் 115 தனியார் நிறுவனங்களுக்கு சுமார் 47,968 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்படுகிறது.
மேலும் இந்த கடன்கள் இந்த இடைப்பட்ட காலவெளியில் கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் செலுத்தப்பட்டதாகவும், இந்த சுழற்சி எப்போது நிறுத்தப்பட்டதோ, அந்த கடைசி சுழற்சியில் 2,397 கோடி ரூபாய் அசலும், 415 கோடி ரூபாய் வட்டியும் மோசடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ரெலிகேருக்கு நஷ்டம்
ரெலிகேர் நிறுவனத்துக்கு மேற்கூறிய மூவரால், ரெலிகேர் எண்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட் ஆகியவற்றிற்கு வரவேண்டிய கடன் தொகை வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டது என்றும், இதனால் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் லிமிடெட்டுக்கு, முதலீட்டில் சுமார் 2,397 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், 415 கோடி ரூபாய் வட்டியும் நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் கைது
இந்த நிறுவனம் அளித்த புகாரின் பேரில் இந்த நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்கள் ஆன சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரும், ரெலிகேர் நிறுவனத்தின் முன்னாள் சி.எம்.டி சுனில் கோத்வானி, இது தவிர இந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளான கவி அரோரா மற்றும் அனில் சக்சேனா ஆகியோரும் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் விசாரணை செய்ய டெல்லி உயர் நீதி மன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆர்.பி.ஐ ஏற்கனவே எச்சரிக்கை
ரெலிகேர் மற்றும் அதன் கார்ப்பரேட் கடன் புத்தகம் குறித்து கட்டுப்பாட்டாளரான ரிசர்வ் வங்கியால் ஏற்கனவே தொடர்ந்து எச்சரிக்கப்பட்டதாகவும் எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் சி.எல்.பி போர்ட்போலியோ குறித்து அவ்வப்போது ஆர்.பி.ஐ எச்சரித்திருந்ததாலும், இந்த எச்சரிப்பு பற்றி, விளம்பரதாரர்கள் மத்தியில் கவனிக்கப்படவேயில்லை என்றும், மாறாக சிங் குடும்பமும், சுனில் கோத்வானியும் கடன் வழங்குவதை ஊக்குவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆவணங்களில் மோசடி
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் தொகை தனியார் நிறுவனங்களுக்கு மிக குறுகிய கால அறிவிப்பில் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், பெரும்பாலும் இவ்வாறு வழங்கப்பட்ட கடன்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்பட்டதாகவும் ரெலிகேர் நிறுவனம் குற்றம் சாட்டியது. அதிலும் பல கடன்களில், கடன் கொடுக்கப்பட்ட பின்னரே போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் எஃப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications