டெல்லி : இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயை தொடும் என சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமையன்று மின்னணு மூலம் சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதின் கட்கரி, நடப்பு 2019 - 2020ம் நிதியாண்டில் இந்த சுங்க கட்டணம் வசூலானது 30,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதுவும் நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 30,000 கோடி ரூபாயாவது இருக்கும் என்றும், மேலும் நாங்கள் நிறைய புதிய ரோடுகளை இன்னும் 5 ஆண்டுகளில் அமைக்க திட்டமிட்டுள்ளோம், இதனால் அடுத்த ஐந்து வருடத்தில் சுங்க கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
மேலும் தற்போது 1.4 லட்சம் கிலோமீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகள் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் உள்ளது என்றும், இதில் 24,996 கிலோ மீட்டர் தொலைவுள்ள நெடுஞ்சாலைகளில் தற்போது சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன என்றும், இதன் மூலம் மட்டுமே சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது என்றும், இந்த ஆண்டு இறுதியில் இது 27,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இது 75,000 கிலோ மீட்டாராக அதிகரிக்கும் என்றும் கட்கரி கூறியுள்ளார்.
மேலும் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும் என்றும், இதன் மூலம் சுங்க சாவடி கட்டண முறைகளில் உள்ல பிரச்சனைகள் முழுமையாக நீங்கி விடும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 500 டோல் பிளாசாக்களில் 85- 90% மின்னணு கட்டணங்களுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளன என்றும், மீதமுள்ள 10 - 15% டோல் பிளாசாக்களில் நவம்பர் இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, மொத்த டோல் கட்டணத்தில் சுமார் 35% கட்டணங்கள் ஃபாஸ்டேக் வழியாக மின்னணு கட்டணமாக பெறப்படுகிறது என்றும், தினசரி 1 மில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் இதன் மூல 24 கோடி ரூபாய் டிஜிட்டல் மூலமாக பெறப்படுகிறது என்றும் என்.ஹெச்.ஏ.ஐயின் உறுப்பினர் ஆஷிஷ் சர்மார் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications