டிசிஎஸ் ஊழியர்கள் தங்களை ஒரு ஹாட் டேலண்ட் என நிரூபித்தால் இரு மடங்கு சம்பளம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக இந்த நிறுவனம் ஊழியர்களை சோதனை செய்வதற்காக, கடினமான தேர்வுகள் இருக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி, இந்த கடிமான தேர்வுகளில் யார் தேர்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு இரு மடங்கு சம்பளத்தினை நிறுவனம் வழங்கும் எனவும் கூறியுள்ளார்.
முன்னணி ஐடி நிறுவனமான டி.சி.எஸ் நிறுவனம், ஐடி துறையில் சிறந்த திறமையுள்ளவர்களை ஈர்க்க இப்படி திட்டமிட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டு டி.சி.எஸ் நிறுவனம் இந்த தகுதிச் சோதனையை தொடங்கிய நிலையில், இது கிட்டதட்ட 2.2 லட்சம் ஊழியர்களை ஈர்த்துள்ளதுள்ளதாகவும் கூறியுள்ளது. இதற்காக டிசிஎஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு கேம்பஸ்சாக செல்ல வேண்டிய அவசியத்தை நீக்கியது என்றும், இது தற்போது பணியமர்த்தல் நேரத்தையும் முந்தைய நான்கு மாத காலத்திலிருந்து, ஆறு வாரா காலாமாக மாற்றியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சோதனைக்கு பின்பு இந்த நிறுவனம் 30,000 ஊழியர்களுக்கு சலுகை கடிதத்தினை அனுப்பியுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எங்கள் தேசிய சோதனை மூலம் தேர்தெடுக்கப்பட்ட சிறந்த நபர்களுக்கு, நாங்கள் அவர்களுக்கு மற்றொரு சோதனையை வழங்குகிறோம் என்றும், அந்த சோதனையில் அவர்கள் தேர்ந்துவிட்டால் அவர்களை ஹாட் டேலண்ட் என்று அழைப்போம் என்றும், மேலும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இரு மடங்கு சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் நாங்கள் உள்ஊழியர்களுக்கும் இந்த சோதனையை செய்ய முடிவு செய்தோம், இதன் படி மூன்று வருட அனுபவமுள்ள ஊழியர்களுக்காக நாங்கள் இதை செய்தோம் என்றும், நாங்கள் அவர்களுக்கும் இதே டிஜிட்டல் சேவையை வழங்குகிறோம் என்றும் லக்காட் கூறியுள்ளார்.
மேலும் தகவல் தொழில்நுட்ப துறையின் நிலைமாறும் நிலையில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இதனால் இரண்டு ஆண்டுகளாக நாங்கள் திறமையானவர்களை பணியமர்த்தல், சிறந்த திறமையானவர்களை கண்டறிதல், சிறந்த திறமைகளை அங்கீகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்களுடன் திறந்த மற்றும் சுறுசுறுப்பான வழியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அங்கீகரித்தல் ஆகியவற்றில் அடிப்படையில் செயல்படுகிறோம் என்றும் இந்த் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி என்.ஜி சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications