சாவ் பாலோ, பிரேசில்: கூடிய விரைவில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான பிரேசிலுக்கு சுற்றுலா பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான வேலைகளுக்காகவோ பிரேசில் நாட்டுக்குச் செல்பவர்கள், பிரேசில் நாட்டிடம் இருந்து விசா பெற வேண்டும் என்கிற அவசியம் இருக்காது எனச் சொல்லி இருக்கிறது பிரேசில் அரசு.
இந்த அறிவிப்பை தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசில் நாட்டின் ஜனாதிபதி ஜெய்ர் பால்சனாரோ நேற்று (அக்டோபர் 24, 2019 வியாழக்கிழமை) தெரிவித்தார். கூடிய விரைவில் இந்த விசா ரத்து தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள், பிரேசில் அரசிடம் இருந்து வெளி ஆகும் என எதிர்பார்க்கலாம்.

தீவிர வலது சாரி போக்கைக் கடைபிடிக்கும் அரசியல்வாதியான ஜெய்ர் பால்சனாரோ இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரேசில் நாட்டின் அதிபராக ஆட்சிக்கு வந்த பின், பல வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபார ரீதியிலான பயணங்களை மேற்கொள்பவர்களுக்கான விசா தேவைகளை குறைப்பதற்கான கொள்கையை உருவாக்கினார்
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து, பிரேசில் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வணிக ரீதியிலான பயணத்தை மேற்கொள்பவர்களுக்கோ பிரேசில் அரசிடம் இருந்து விசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்தது பிரேசில் அரசு. ஆனால் இதுவரை எந்த ஒரு வளர்ந்த நாடுகளும், பிரேசில் நாட்டில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வந்து போகலாம் என தங்கள் குடியுரிமைச் சட்டங்களை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது.
இப்போது தான் பிரேசில் நாட்டின் அதிபர் வளரும் பொருளாதார சக்திகளான சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளையும் கவனிக்கத் தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் அதிகாரபூர்வமாக சீனாவுக்குச் சென்ற பிரேசில் அதிபர் ஜெய்ர் பால்சனாரோ, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சுற்றுலாவுக்காகவும், வியாபார ரீதியாகவும் பயணம் மேற்கொள்பவர்கள், இனி பிரேசில் அரசிடம் இருந்து விசா பெற வேண்டிய தேவை இருக்காது எனச் சொல்லி இருக்கிறார். எப்படியோ நல்லது நடந்தால் சரி.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications