மூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடந்த செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், அதன் நிகரலாபம் 218 சதவிகிதம் அதிகரித்து 3,012 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதே முந்தைய ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகரலாபம் 944..87 கோடி ரூபாயாக மட்டுமே இருந்துள்ளது.

மூன்று மடங்கு லாபம் கண்ட எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்!

இதே இந்த வங்கியின் நிகர வருவாய் 17.67 சதவிகிதம் அதிகரித்து, 24,600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 20,905.7 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பொதுத்துறை வங்கியின் சொத்து மதிப்பும் கடந்த இரண்டாவது காலாண்டில் அதிகரித்துள்ளது. இதே மொத்த செயல்படாத சொத்துக்களின் மதிப்பும் 1.61 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 1.68 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளது கவனிக்கதக்கது. இதேபோல் மொத்த வாராக்கடன்களின் மதிப்பும் 59,939.2 கோடி ரூபாயாக சரிந்துள்ளதாகவும், இதே கடந்த ஜூன் காலாண்டில் 65,624 கோடி ரூபாயாக இருந்ததாகவும், இது முந்தைய ஆண்டில் செப்டம்பர் காலாண்டில் 94,809.98 கோடி ரூபாயாக இருந்ததாகவும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் 17.67 சதவிகிதம் அதிகரித்து 24,600 கோடி ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 20,906 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே செயல்பாட்டு லாபம் 31 சதவிகிதம் அதிகரித்து, 18,199 கோடி ரூபாயாகவும், இதே முந்தைய ஆண்டில் 13,905 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

உள்நாட்டு கடன் வளர்ச்சி 8.43 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், குறிப்பாக சில்லறை மற்றும் தனிநபர் கடன் 18.90 சதவிகிதம் அதிகரித்து, 6.85 லட்சம் கோடி ரூபாயாகவும், இதே கார்ப்பரேட் கடன் வளர்ச்சி 3 சதவிகிதம் அதிகரித்து, 7.65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், உள்நாட்டு கரண்ட் அக்கவுண்ட் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் டெபாசிட் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வங்கி பங்கின் விலை தற்போது 7 சதவிகிதம் அதிகரித்து 282 ரூபாயாக அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI net profit jumped 3 times to Rs.3,012 crore on September quarter

SBI net profit jumped 3 times to Rs.3,012 crore on September quarter, and it's posted profit of Rs 944.87 crore in the same quarter in last year.
Story first published: Friday, October 25, 2019, 15:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X