வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய மக்கள் அவர்கள் வாங்கும் சம்பளத்தை தனது குடும்பத்தினருக்கு அனுப்பி வருகிறார்கள். செலவுகள் போக மீதி தொகையை நண்பர்கள், உறவினர்கள் என தங்களது மாத சம்பளத்தை செலவிடுகின்றனர். அப்படி அவர்கள் அனுப்பும் பணம் வெளிநாடுகளில் இருந்து அனுப்பியதன் மூலம் 10,70,700 கோடியை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இந்தியா 2024-ஆம் ஆண்டில் முதலிடத்தில் உள்ளது.
உலக வங்கியின் பொருளாதார நிபுணர்களால் தொகுக்கப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டில் 129 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்வோர் தங்கள் சொந்த நாட்டிற்கு பணம் அனுப்பும்போது, அந்த நாட்டுக்கு அதன் வாயிலாக வருவாய் கிடைக்கிறது.

இதன்மூலமாக இந்த ஆண்டில் இந்தியா 129 பில்லியன் டாலர் வரவழைப்புடன் பணம் அனுப்புவதில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து மெக்ஸிகோ ($68 பில்லியன்), சீனா ($48 பில்லியன்), பிலிப்பைன்ஸ் ($40 பில்லியன்) மற்றும் பாகிஸ்தான் ($33 பில்லியன்) ஆகியவை உள்ளன. இது உலக வங்கி தரவுகளின்படி, 2023 இல் பதிவுசெய்யப்பட்ட 1.2% உடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு பணம் அனுப்பும் வளர்ச்சி விகிதம் 5.8% என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று தொடங்கியதைத் தொடர்ந்து, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) அதிக வருமானம் கொண்ட நாடுகளில் வேலைகள் மீட்டெடுப்பு ஆனது பணம் அனுப்புவதற்கான முக்கிய உந்துதலாக உள்ளது. இது குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகளில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் சீராக மீண்டுள்ளது. எனவே, பிப்ரவரி 2020 இல் காணப்பட்ட தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட 11 சதவீதம் அதிகமாக உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு (LMICs) அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பணம் 2024 ஆம் ஆண்டில் 685 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பணம் அனுப்புதல் வெளிநாட்டு நிதிகளை விஞ்சியது. இது பணப்பரிமாற்றங்கள் அந்நிய நேரடி முதலீட்டைக் கூட கணிசமாக விஞ்சியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் பணம் அனுப்புதல், அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவது 57 சதவீதமாக உயர்ந்த நிலையில், அன்னிய நேரடி முதலீடு 41 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இது மக்கள்தொகைப் போக்குகள், வருமான இடைவெளிகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் இயக்கப்படும் பெரும் இடம்பெயர்வு அழுத்தங்கள் காரணமாக பணம் அனுப்புதல் தொடர்ந்து அதிகரிக்கும் என்று உலக வங்கி அறிக்கை விளக்கமளித்துள்ளது.
நாடுகள் பணம் அனுப்பும் அளவு மற்றும் மீள்தன்மை ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், இது வறுமைக் குறைப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு நிதியளித்தல், குடும்பங்களை நிதியளித்தல் மற்றும் மாநில மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான மூலதனச் சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இப்போது, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு பெரும் பணம் அனுப்பி வைக்கப்படுவதால், தெற்காசியாவிற்கு அனுப்பப்படும் பணம், வரும் நாட்களில் அதிகபட்சமாக 11.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக என்று பொருளாதார நிபுணர்கள் திலீப் ராதா, சோனியா பிளாஜாயுங் மற்றும் நிதி ஆய்வாளர் ஜூ கிம் ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications