செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சிக்கு சான்றாக, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது உயர்நிலைப் பள்ளி நண்பர்கள், உலகின் மிக இளம் வயது பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர். இவர்களில் இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்தியது எப்படி..?: சான் பிரான்சிஸ்கோவை மையமாக கொண்ட AI பணியமர்த்தல் தளமான 'Mercor'-ன் இணை நிறுவனர்களான ப்ரெண்டன் ஃபுடி (Brendan Foody), ஆதர்ஷ் ஹிரேமத் (Adarsh Hiremath), மற்றும் சூர்யா மிதா (Surya Midha) ஆகியோர் சமீபத்தில் தங்கள் நிறுவனம் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலராக உயர்ந்ததால், இந்த மாபெரும் சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். 23 வயதில் பில்லியனரான மெட்டா இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாதனையை இந்த இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டின்படி, சுமார் 22% பங்குகளை வைத்திருக்கும் இந்த 3 நிறுவனர்களுக்கும், தலா 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கிடைத்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ப்ரெண்டன் ஃபுடி உள்ளார். தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆதர்ஷ் ஹிரேமத் உள்ளார். இவரது பெற்றோர் கர்நாடகாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். அதேபோல், நிர்வாகக் குழு தலைவராக சூர்யா மிதா உள்ளார். இவரது பெற்றோர் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.
இந்த மூவரின் வெற்றிப் பயணம் சான் ஜோஸில் உள்ள பெல்லார்மைன் கல்லூரி ஆயத்தப் பள்ளியில் தொடங்கியது. அங்கு, தேசிய விவாதப் போட்டிகளுக்கான இரவு நேரத் தயாரிப்பின்போது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு இவர்கள் வெவ்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் 'Mercor' நிறுவனத்தை தொடங்கினர். ஆரம்பத்தில், இந்தியாவில் உள்ள மென்பொருள் பொறியாளர்களை அமெரிக்காவின் புதிய நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு ஆன்லைன் ஃப்ரீலான்ஸ் சந்தையாக இது இருந்தது.
ஆனால், ChatGPT போன்ற அடிப்படை AI மாடல்களை மேம்படுத்தத் தேவைப்பட்ட மனிதத் தலையீடு கொண்ட சேவைகளுக்கான தேவை நீடித்தபோது, இந்த நிறுவனம் விரைவாகத் தனது பாதையை மாற்றிக்கொண்டது. தற்போது, Mercor ஒரு AI-யால் இயக்கப்படும் தளமாக வளர்ந்துள்ளது.
இது சட்டம், மருத்துவம், நிதி மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்டுள்ளது. இந்த நிபுணர்கள், AI அல்காரிதம்களால் செய்ய முடியாத நுணுக்கமான மனித தீர்ப்பைச் செலுத்தவும், தரவுகளை லேபிள் செய்யவும், காட்சிகளை உருவகப்படுத்தவும் பணம் பெறுகிறார்கள்.
Mercor நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 500 மில்லியன் டாலர் மதிப்பை கடந்தது. கல்லூரியை தவிர்க்க உதவும் திலீல் ஃபெல்லோஷிப் வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மிகவும் விரைவாக நிதி திரட்டியது. பின்னர், Meta நிறுவனம் Mercor-ன் முக்கிய போட்டியாளர் 'Scale AI'-யை 14.3 பில்லியன் டாலர் செலவில் வாங்கியது. இதனால், பல பெரிய AI நிறுவனங்கள் Mercor-இடையிலான வாய்ப்புகளுக்கு ஈர்க்கப்பட்டன. Mercor-க்கு கிடைத்த 350 மில்லியன் டாலர் முதலீடு, நிறுவனர் குழுவை பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்க காரணமாக அமைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications