இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு காரணங்களுக்காகத் தேக்கம் அடைந்த வீடு கட்டுமான திட்டங்களை முடிக்க வேண்டும் எனச் சுமார் 3.5 பில்லியன் டாலர் மதிப்பிலான தொகை ஒதுக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் மூலம் 2021ஆம் ஆண்டில் கட்டிமுடிக்கப்படாமல் இருக்கும் திட்டங்கள் விரைவாகக் கட்டி முடிக்க முடியும்.
முதற்கட்டமாக சுமார் 16 திட்டங்களில் அடங்கிய 4000 வீடுகள் ஏப்ரல் 1ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டு வீட்டை வாங்கியவர்கள் கையில் ஒப்படைக்க உள்ளதாக எஸ்பிஐகேப் வென்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான இர்பான் காசி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2019ல் Special Window for Completion of Construction of Affordable and Mid-Income Housing Projects (SWAMIH) திட்டத்தின் கீழ் இந்தச் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5 லட்சம் வீடுகள் பல்வேறு காரணங்களுக்காகக் கட்டிமுடிக்க முடியாமல் பாதியில் நிற்கிறது. இதன் மூலம் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 4.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகங்கள் முடங்கியுள்ளது.
கட்டுமான நிறுவனங்களின் மோசமான நிதிநிலை, கடன் பெற முடியாமல் தவிப்பு, கடன் நிலுகை பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் சுமார் 63 பில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டுக் கட்டுமான திட்டங்கள் இந்தியா முழுவதும் தேக்கம் அடைந்துள்ளது.
இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகவே மத்திய அரசு SWAMIH என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் 3.5 பில்லியன் டாலர் அளவிலான சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் முதற்கட்டமாகத் தேக்கம் அடைந்த சுமார் 159 திட்டங்கள் நிதியுதவி பெற்று இதனால் 1 லட்சம் வீடுகள் விரைவில் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications