வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் 2025-ஆம் ஆண்டுக்கான அதன் வேலை வாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் பணியமர்த்தும் இந்திய நிறுவனங்களில் சுமார் 30 சதவீத நிறுவனங்கள் பட்டப்படிப்பு இல்லாமல் திறன் அடிப்படையில் பணியமர்த்தலை செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் இந்த எண்ணிக்கை 19 சதவீதமாகவே இருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் திறமைக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை தெள்ளத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் வேலை வாய்ப்பு சந்தை கடுமையான மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் பணியமர்த்தல் நடைமுறைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. அதோடு புவிசார் அரசியல் பதட்டங்கள், காலநிலை மாற்றங்கள் ஆகியவை 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வேலை சந்தையில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அறிக்கை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ், ரோபோட்டிக்ஸ், தானாக இயங்கும் சிஸ்டம்கள் மற்றும் எனர்ஜி டெக்னாலஜி போன்றவற்றில் அதிக முதலீடு செய்து வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் தொழில் நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப நிறுவனங்கள் தங்களை தானே உயர்த்திக் கொண்டு வருகின்றன. அதற்கு ஏற்றார் போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் முதலீடுகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்திய நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய சகாக்களுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்கின்றனர்.
இதே போல இந்தியாவில் உள்ள 35 சதவீத நிறுவனங்களில்.. முக்கியமாக செமி கண்டக்டர்கள் மற்றும் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கின்றன. மேலும் 21 சதவீத நிறுவனங்களில் குவாண்டம் மற்றும் என்கிரிப்ஷன் தொழில்நுட்பங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த மாற்றங்களினால் வேலை சந்தையில் அதிகளவிலான வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிக் டேட்டா ஸ்பெஷலிஸ்ட், ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் ஸ்பெஷலிஸ்ட், செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணிகளுக்கு அதிக தேவையை உருவாக்கும் என்று வேர்ல்ட் எக்கனாமிக் ஃபோரம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப டிகிரியை விடுத்து திறன்களுக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக 30 சதவீத இந்திய நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன. சமீபத்தில் எலான் மஸ்க் தனது X பதிவில் ஒரு போஸ்டை வெளியிட்டு இருந்தார். அதில் எவ்ரிதிங் என்ற அப்ளிகேஷனை செய்து முடிப்பதற்காக பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும், இதற்கு தன்னுடன் இணைந்து செயல்பட ஒரு ஹார்ட்கோர் சாப்ட்வேர் இன்ஜினியர் தேவை என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவர் தன்னுடைய பதிவில், "நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள்? எந்த பள்ளிக்குச் சென்றீர்கள்? அல்லது எந்த பெயர் பெற்ற நிறுவனத்தில் பணிபுரிந்தீர்கள்? என்றெல்லாம் எங்களுக்கு கவலையே இல்லை உங்களுடைய ப்ரோக்ராமை மட்டும் எங்களுக்கு அனுப்புங்கள்!", என்று கூறி தனது பதிவை பகிர்ந்திருந்தார்.
எனவே திறன்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் போக்கு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. பட்டப்படிப்பை முடிக்காமல் டேலண்டை மட்டுமே நம்பியிருக்கும் நபர்களுக்கு இது உதவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications