இந்திய ஐடி துறையில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஆன்போர்டிங் தாமதம் தான்.
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தில் துவங்கி அக்சென்சர் வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியில் சேர்த்துவிட்டு பணிக்கு அழைக்காமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களின் இந்தச் செயலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் தெரியுமா..?
ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, அக்சென்சர் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பணியில் அமர்த்துவதற்காகப் பல ஊழியர்களை ஆஃபர் லெட்டரை அனுப்பிவிட்ட நிலையில், பல மாதங்களாகியும் நிறுவனத்தில் சேர்க்காமல் உள்ளது.
பாதிப்பு
இதனால் பல அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தும், பல பட்டதாரி மாணவர்கள் பல மாதங்களை இழந்தும் நிற்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்களின் இந்தச் செயலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
NITES அமைப்பு
ஐடி ஊழியர்களுக்கான அமைப்பான NITES வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, அக்சென்சர் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் சுமார் 30000 பேருக்கு ஆஃபர் லெட்டரை கொடுத்துவிட்டு ஆன்போர்டிங் செய்யாமல் வைத்துள்ளது என NITES அமைப்பின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.
30000 பேர்
சர்வதேச பொருளாதாரா மந்தநிலை குறித்த கணிப்புகள் வெளியாவதற்கு முன்பு ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் வந்த காரணத்தால் கடந்த வருடம் முழுவதும் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவ் எடுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமான நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை அழைக்க முடியாத கட்டத்தில் தள்ளப்பட்டது.
இன்போசிஸ் - அக்சென்சர்
இதனால் இந்த எண்ணிக்கை அடுத்த சில மாதத்தில் 30000 என்ற அளவையும் தாண்டும் என எதிர்பார்க்கிறது NITES. இன்போசிஸ் பலருக்கு வேலைவாய்ப்புகள் இல்லை என அறிவித்துள்ள நிலையில் அக்சென்சர் 2023ல் பணியில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications