இந்திய ஐடி துறையில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ஆன்போர்டிங் தாமதம் தான்.
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனத்தில் துவங்கி அக்சென்சர் வரையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியில் சேர்த்துவிட்டு பணிக்கு அழைக்காமல் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களின் இந்தச் செயலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் தெரியுமா..?
ஐடி நிறுவனங்கள்
இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, அக்சென்சர் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் பணியில் அமர்த்துவதற்காகப் பல ஊழியர்களை ஆஃபர் லெட்டரை அனுப்பிவிட்ட நிலையில், பல மாதங்களாகியும் நிறுவனத்தில் சேர்க்காமல் உள்ளது.
பாதிப்பு
இதனால் பல அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்தும், பல பட்டதாரி மாணவர்கள் பல மாதங்களை இழந்தும் நிற்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்களின் இந்தச் செயலால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தான் அதிர்ச்சி அளிக்கிறது.
NITES அமைப்பு
ஐடி ஊழியர்களுக்கான அமைப்பான NITES வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி, அக்சென்சர் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் சுமார் 30000 பேருக்கு ஆஃபர் லெட்டரை கொடுத்துவிட்டு ஆன்போர்டிங் செய்யாமல் வைத்துள்ளது என NITES அமைப்பின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.
30000 பேர்
சர்வதேச பொருளாதாரா மந்தநிலை குறித்த கணிப்புகள் வெளியாவதற்கு முன்பு ஐடி நிறுவனங்களுக்கு அதிகப்படியான திட்டங்கள் வந்த காரணத்தால் கடந்த வருடம் முழுவதும் கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூவ் எடுக்கப்பட்டது. தற்போது நிலைமை மோசமான நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை அழைக்க முடியாத கட்டத்தில் தள்ளப்பட்டது.
இன்போசிஸ் - அக்சென்சர்
இதனால் இந்த எண்ணிக்கை அடுத்த சில மாதத்தில் 30000 என்ற அளவையும் தாண்டும் என எதிர்பார்க்கிறது NITES. இன்போசிஸ் பலருக்கு வேலைவாய்ப்புகள் இல்லை என அறிவித்துள்ள நிலையில் அக்சென்சர் 2023ல் பணியில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?



Click it and Unblock the Notifications