டெல்லி: இந்தியாவின் உயரிய கல்வி நிறுவனங்களாக கருதப்படும் ஐஐடிக்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் பெரிய நிறுவனங்களில் பணிக்கு அமர்ந்துவிடுவார்கள் என்பது தான் இத்தனை நாள் கேள்வி பட்ட செய்தி. ஆனால் தற்போது நிலைமை மாறி இருப்பது ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களில் 32 சதவீதம் பேர் கேம்பஸ் பிளேஸ்மெண்டுகள் மூலம் பணிவாய்ப்பு பெறவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் கிடைக்கப்பெற்றதாக சிஎன்பிசி டிவி18 வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே நடப்பாண்டியல் ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயின்றவர்களில் பல மாணவர்கள் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர் என அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் தான் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை அதிகரித்தும், புதிதாக ஆட்களை தேர்வு செய்வது உள்ளிட்டவற்றை குறைத்தும் உள்ளன. ஆனால் கொரோனாவுக்கு முன்பிருந்தே ஐஐடி நிறுவனங்களில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது என்பது இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற விவரங்களில் வெளியாகியுள்ளது. சிஎன்பிசி டிவி 18 நிறுவனம் கிட்டத்தட்ட 23 ஐஐடி நிறுவனங்களிலும் நிகழ்ந்த கேம்பஸ் இன்டர்வியூகள் மற்றும் அதில் வேலை கிடைத்த மாணவர்களின் தகவல்களை ஆர்டிஐ தகவலின் மூலம் பெற்றுள்ளது.
பாலக்காடு , திருப்பதி, காந்தி நகர், பாட்னா இந்தூர், ஹைதராபாத் மற்றும் ஜோத்பூர் ஆகிய ஐஐடி நிறுவனங்களில் பயின்றவர்களில் கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் விகிதம் மிக மிக குறைவாக உள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலின் படி 2016 ஆம் ஆண்டு 30 சதவீத மாணவர்கள், 2017ஆம் ஆண்டு 31 சதவீத மாணவர்கள், 2018 ஆம் ஆண்டு 38 சதவீத மாணவர்கள், 2019 ஆம் ஆண்டு 29 சதவீத மாணவர்கள், 2020 ஆம் ஆண்டு 28 சதவீத மாணவர்கள், 2021இல் 35 சதவீத மாணவர்கள் கேம்பஸ் மூலம் பிளேஸ் ஆக வில்லை என செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 முதல் 2023 வரை ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது சராசரியாக 29 சதவீத மாணவர்கள் கேம்பஸ் பிளேஸ்மெண்ட்கள் மூலம் பணி வாய்ப்புகளை பெறவில்லை.
இதனிடையே 2024 ஆம் ஆண்டு ஐஐடி மும்பையில் கல்வி பயின்றவர்களில் 6.1% மாணவர்கள் இன்னும் வேலை வாய்ப்பு பெறவில்லை என்று அந்த கல்வி நிறுவனமே எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications