357 இணையதளங்களுக்கு தடை; 2,400 வங்கிக்கணக்குகள் முடக்கம்!. மத்திய அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், விதிகளை மீறியதாக 357 இணையதளங்கள் மற்றும் 2,400 வங்கிகள் கணக்குகளுக்கு தடை விதித்து சுமார் ரூ. 126 கோடியை முடக்கி சரக்கு மற்றும் சேவை வரி புலனாய்வு இயக்குநரகம் (DGGI) நடவடிக்கை எடுத்துள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ், ஆன்லைன் பண கேமிங் (Online Money Gaming) என்பது செயல்படக்கூடிய உரிமைகோரலாக இருப்பதால், அது 'சரக்குகளின்' விநியோகமாக வகைப்படுத்தப்பட்டு 28% வரிக்கு உட்பட்டது. இந்தத் துறையில் செயல்படும் நிறுவனங்கள் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.

357 இணையதளங்களுக்கு தடை; 2,400 வங்கிக்கணக்குகள் முடக்கம்!. மத்திய அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

ஜிஎஸ்டி நுண்ணறிவுத் துறை (DGGI) ஆன்லைன் பண கேமிங், சூதாட்டம், மற்றும் பரிவர்த்தனை (betting/gambling) செயல்படுத்தும் 700-க்கு மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களை கண்காணித்து வருகிறது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியதன் மூலமும், வரி செலுத்த வேண்டிய தொகைகளை மறைப்பதன் மூலமும், வரிக் கடமைகளைத் தவிர்ப்பதன் மூலமும் ஜிஎஸ்டியை ஏய்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இணைந்து, சட்டவிரோத / விதிமீறிய வெளிநாட்டு ஆன்லைன் பண கேமிங் நிறுவனங்களின் 357 இணையதளங்கள் தடைசெய்துள்ளன.

இதுமட்டுமல்லாமல், சமீபத்திய விசாரணையில், வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) சட்டவிரோத ஆன்லைன் கேமிங் தளங்களை குறிவைத்து, பங்கேற்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க பயன்படுத்தப்பட்ட பல வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. இதேபோல், வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) மற்றும் இந்திய குற்றப் புள்ளிவிவரக் கழகம் (I4C), தேசிய கட்டணக் கழகம் (NPCI) ஆகியவை இணைந்து, சட்டவிரோத ஆன்லைன் கேமிங் தளங்களின் 2,000 வங்கி கணக்குகளை முடக்கியதுடன், ரூ.4 கோடியையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதுதொடர்பான விசாரணையில், சட்டவிரோத வெளிநாட்டு ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் இணையதளங்களில் பயன்படுத்தப்பட்ட UPI ஐடிகள் மற்றும் வங்கி கணக்குகள் கண்டறியப்பட்டன. அதில், 392 வங்கி கணக்குகள் Debit Freeze செய்யப்பட்டு, மொத்தம் ரூ.122.05 கோடி பணம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. Debit Freeze என்பது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத வகையில் கணக்கு முடக்கப்படும் முறையாகும்.

மேலும், இந்தியாவிற்கு வெளியில் இருந்து ஆன்லைன் பண கேமிங் தளங்களை இயக்கி வரும் சில இந்தியர்களுக்கு எதிரான மற்றொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த நபர்கள் சத்குரு ஆன்லைன் மனி கேமிங் பிளாட்ஃபார்ம், Mahakaal Online Money Gaming Platform மற்றும் Abhi247 Online Money Gaming Platform உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் கேமிங்கை எளிதாக்குகின்றனர். இதன்மூலம் இந்திய வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் வசூலிக்க மியூல் வங்கி (Mule Bank Accounts) கணக்குகளைப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்த தளங்களுடன் இணைக்கப்பட்ட 166 மியூல் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இதுபோன்ற மேலும் நபர்களுக்கு எதிரான விசாரணை நடந்து வருகிறது என்றும் வருவாய் நுண்ணறிவுத்துறை (DGGI) தெரிவித்துள்ளது. விதிமீறிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வர்த்தக சந்தையில் நேர்மையான போட்டியை சீர்குலைக்கின்றன. இது உள்ளூர் நிறுவனங்களைப் பாதித்து, சந்தை சமநிலையை மாற்றுகிறது.

மேலும், சட்டத்தை மீறி செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் தடைகளை மீறி புதிய இணையதளங்களை உருவாக்குகின்றன என்றும் 'மியூல்' வங்கி கணக்குகள் மூலம் பண பரிவர்த்தனைகளை நடத்துகின்றன என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோசடிக்காக பயன்படுத்தப்படும் வங்கி கணக்குகள் ('மியூல்' அக்கவுண்ட்கள்) மூலம் திரட்டப்படும் நிதி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Take a Poll

மேலும், சில பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் சட்டவிரோத ஆன்லைன் பண சூதாட்ட (Money Gaming) தளங்களை விளம்பரப்படுத்தி சிக்கியுள்ளனர். இந்த தளங்களில் பணமீட்டும் மோசடிகள் இருக்கக்கூடும் என்பதால், மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் இது அவர்களின் தனிப்பட்ட நிதிக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் நிதி ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஆதரவளிக்கக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FAQs
357 இணையதளங்கள், 2,400 வங்கி கணக்குகளை ஏன் மத்திய அரசு முடக்கியது?.

DGGI ஆனது, இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்படும் கடன் மற்றும் ஆன்லைன் சூதாட்ட தளங்களை எதிர்த்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. இவை சட்டபூர்வமான GST பதிவு இல்லாமல் செயல்பட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டன. ம்யூல் கணக்குகள் மூலம் பண பரிவர்த்தனை செய்ய பயன்படுத்தப்பட்டன.

இந்த தளங்கள் எப்படி வரிகளை ஏய்க்கின்றன?

GST பதிவு செய்யாமல், 28% வரி செலுத்தாமல் செயல்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து செயல்படுவதால், இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படாமல் இருக்கின்றன.

எவ்வளவு தொகை முடக்கப்பட்டது?

சுமார் ₹126 கோடி இவற்றில் முடக்கப்பட்டதாக DGGI தெரிவித்துள்ளது. மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தளங்களை விளம்பரப்படுத்திய சினிமா, கிரிக்கெட் பிரபலர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஏன் இந்த தளங்கள் இந்திய அரசுக்கு கவலையாக இருக்கின்றன?

இவை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நாட்டு பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த தளங்கள் சமூகத்திற்கும், தேசிய பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கலாம், ஏனெனில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் இதில் இடம்பெறலாம்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+