நம்மில் பலரும் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை ஏதாவது ஒரு பொருளிலோ அல்லது பொன்னிலோ முதலீடு செய்து இரட்டிப்பாக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் சில நேரங்களில் சொத்துக்களை வாங்குவதும் நம்முடைய பணத்தை கரைத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? சொத்துக்களை வாங்குவது ஒருவரை பணக்காரராக தானே மாற்றும்.. எப்படி ஏழையாக்கும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இந்தப் பதிவில் அதற்கான பதிலை பார்ப்போம்.
நீங்கள் ஒரு தனி வீட்டையோ அல்லது இடத்தையோ வாங்குகிறீர்கள் என்றால் அதில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் நீங்கள் வாங்கக் கூடிய இடம் பிற்காலத்தில் நல்ல விலை போகுமா? என்று சிந்தித்து வாங்க வேண்டும். ஒருவேளை நீங்களே பயன்படுத்துவதற்காக வாங்கினாலும் அருகில் அத்தியாவசிய சேவைகளை பெறுவதற்கான வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் பார்க்க வேண்டும். அதுவே பிளாட் அல்லது அபார்ட்மெண்ட் போன்றவற்றை வாங்கும்போது சற்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

பிளாட் அல்லது அப்பார்ட்மெண்ட்: நீங்கள் ஒரு பிளாட் அல்லது அபார்ட்மெண்ட்டை வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இது பொதுவாக பல்வேறு ப்ளோர்களை கொண்டிருக்கும். ஏதோ ஒரு ப்ளோரில் உங்களுக்கான 2BHK அல்லது 3BHK வீட்டை வாங்குகிறீர்கள்.
சிலர் தாங்கள் ஏற்கனவே ஒரு வீட்டில் இருந்து கொண்டு வாடகைக்கு விடுவதற்காகவும் ப்ளாட் மற்றும் அப்பார்ட்மெண்டில் முதலீடு செய்கின்றனர். இப்படி முதலீடு செய்வது நல்லது என்று தோன்றினாலும் இதில் சில சிக்கலும் உள்ளது. உதாரணமாக ரூ.1 கோடி கொடுத்து ஒருவர் ஒரு பிளாட்டை வாங்குகிறார். அப்படி வாங்கும் பிளாட்டுக்கு 5 சதவீத வாடகையை ஒருவர் தரும் பட்சத்தில் கண்டிப்பாக நீங்கள் வாங்கிய பிளாட்டுக்கு லாபம் கிடைக்கும்.
அதுவே 3 சதவீத வாடகை கொடுத்தால் அதை லாபம் என்றும் வைத்துக்கொள்ள முடியாது. நஷ்டம் என்றும் வைத்துக் கொள்ள முடியாது. 5 சதவீத வாடகைக்கு ஒருவர் வருடத்திற்கு ரூ.5 லட்சத்தை வாடகையாக கொடுப்பார். இதை 12 மாதங்களுக்கும் பிரித்தால் 41,666 ரூபாய் வரும். அதேபோல 3 சதவீத கொடுத்தால் 1 வருடத்திற்கு ரூ.3 லட்ச ரூபாய் வாடகை வருமானம் கிடைக்கும். அப்படியானால் மாதத்திற்கு 25,000 ரூபாய். ஒருவேளை இதற்கும் குறைவாக வாடகை வரும் பட்சத்தில் நீங்கள் வாங்கும் பிளாட் உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம்.
வாகனங்கள்: சிலர் லோனுக்கு வீட்டை கட்டி அதன் பிறகு வீட்டின் முன்பு நிறுத்துவதற்காக வாகனம் வாங்க திட்டமிடுவார்கள். அதற்காக பர்சனல் லோன் அல்லது இதர கடன்களை வாங்கி அதிக அளவில் வாகனத்தில் முதலீடு செய்வார்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் வாங்கும் வாகனத்தின் மதிப்பு ஒரு சில ஆண்டுகளுக்குள் குறையத் தொடங்கிவிடும். தற்போது கார் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் புது புது மாடல்கள் சந்தைக்கு வந்து பிற மாடல்களின் மதிப்பை குறைந்துவிடுகிறது. எனவே கையில் பணத்தை வைத்துக்கொண்டு வாகனங்களில் முதலீடு செய்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் வீடு கட்டி ஏற்கனவே ஒரு இஎம்ஐ இருக்கும்போது மீண்டும் கடன் பெற்று வாகனங்களில் முதலீடு செய்வது உங்களை நிதி சிக்கலில் ஆழ்த்தும்.
பங்குச்சந்தை முதலீடுகள்: இன்றெல்லாம் பங்குச்சந்தை தொடர்பான மோசடிகள் அதிகரித்துவிட்டன. பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மக்களும் தெரியாத நபர்களிடம் சிக்கி கடன் வாங்கி முதலீடு செய்கின்றனர். பங்குச்சந்தை முதலீடுகள் எந்த அளவிற்கு லாபம் தருகிறதோ.. அதே அளவிற்கு ஆபத்தும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கையில் பணம் வைத்துக்கொண்டு தெரியாமல் முதலீடு செய்தாலும் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. எனவே பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று முதலீடு செய்யுங்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள்: விலை உயர்ந்த கடிகாரங்கள், நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதும் ஆபத்தை விளைவிக்கும். சிலர் இதுபோன்ற பொருட்களை வாங்குவதற்காகவே கிரெடிட் கார்டுகளைப் பெற்று செலவு செய்வார்கள். கிரெடிட் கார்டு கடன்களுக்கு பிற கடன்களைக் காட்டிலும் வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது.
எனவே மேலே கூறப்பட்டுள்ள விஷயங்களுக்காக செலவு செய்யும்போது நிதானமாக செயல்படுங்கள்.
More From GoodReturns

PPF கணக்கு ஆரம்பிக்க போறீங்களா? இந்த ஒரு தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

ETF vs மியூச்சுவல் ஃபண்ட்: உங்கள் பணத்தை எதில் போட்டால் டபுள் லாபம்?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications