இந்தியாவில் 2024ஆம் ஆண்டில் 43 லட்சம் கார்கள் விற்பனை ஆகியுள்ளன, கிராமப்புறங்களில் எஸ்யூவி ரக கார்கள் பெரிய அளவில் விற்பனையாகி இருப்பது தெரியவந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் கார்கள் விற்பனை குறித்த புள்ளி விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் இதுவரை இல்லாத அளவாக 43 லட்சம் கார்கள் ஒரு ஆண்டில் விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. மாருதி சுசுகி, ஹூண்டாய் ,டாடா மோட்டார்ஸ் , டொயோட்டா நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து லாபம் கண்டிருக்கின்றன.

குறிப்பாக சந்தையில் எஸ்யூவி ரக கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 41.1 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 43 லட்சம் என உயர்ந்து உயர்ந்துள்ளது. இந்த ஆண்டிலும் கார் சந்தைகள் தானே லீடர் என்பதை மாருதி சுசுகி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் இதுவரை இல்லாத அளவாக ஹோல்சேலில் 17,90, 977 கார்களை விற்பனை செய்துள்ளது.
2018 ஆம் ஆண்டில் 17,51,919 கார்களை விற்பனை செய்ததே மாருதி சுசுகியின் சாதனையாக இருந்த நிலையில் தற்போது அதனை முறியடித்திருக்கிறது. அதேபோல சில்லறை விற்பனையில் பார்க்கும்போது 2023 ஆம் ஆண்டில் மாருதி சுசுகி நிறுவனம் 17,26,661 கார்களை விற்பனை செய்தது, அது 2024 ஆம் ஆண்டில் 17,88,405 கார்கள் என உயர்ந்துள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் தங்களுடைய நெக்ஸா விற்பனை நிலையங்களை சிறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ததே கார்களின் விற்பனை அதிகரிக்க காரணம் என சொல்லப்படுகிறது. அதேபோல கிராமப்புற பகுதிகளில் மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
ஹூண்டாய் நிறுவனத்தை பொருத்தவரை 2024 ஆம் ஆண்டில் 6,05,433 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இதில் எஸ்யூவி கார்கள் மட்டும் 67.6 சதவீதம் என தெரியவந்துள்ளது. கியா இந்தியா நிறுவனம் இந்தியாவில் 2,55,038 கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக தங்கள் நிறுவன கார்கள் விற்பனையாகியுள்ளன என கியா நிறுவனம் கூறியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 5.65 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது, அதேபோல டொயோட்டா நிறுவனம் தங்களுடைய விற்பனை 2023 ஆம் ஆண்டை விட 40 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் டொயோட்டா நிறுவனம் 2.33 லட்சம் கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது அதுவே 2024 ஆம் ஆண்டில் 3.26 லட்சம் என உயர்ந்துள்ளது.
மகேந்திரா மகேந்திரா நிறுவனம் 41,424 கார்களை விற்பனை செய்து 18 சதவீதம் விற்பனை விகிதம் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளது. நிசான் மோட்டார் நிறுவனம் 11,676 கார்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய கார் விற்பனை சரிவடைந்து இருப்பதாக கூறியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications