இந்திய ஸ்டார்ட்அப் சந்தை வரலாற்றில் 2020 முடியும் வரையில் 30 யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 43 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ஏப்ரல் 2021ல் மட்டும் சுமார் 6 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது.
இதைக் கண்டு ஸ்ரீதர் வேம்பு கவலை அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
யூனிகார்ன் நிறுவனங்கள்
யூனிகார்ன் நிறுவனங்கள் என்றால் ஸ்டார்ட்அப் சந்தையில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அதாவது 7,500 கோடி ரூபாய் அளவிற்கு மதிப்பீட்டைத் தொட்டால் அது யூனிகார்ன்.
1 பில்லியன் டாலர்
இதேபோல் யூனிகார்ன் நிறுவனங்கள் தான் வர்த்தக மற்றும் சேவை விரிவாக்கத்திற்காக அவ்வப்போது முதலீட்டை ஈர்க்கும் போது மதிப்பீடு செய்யப்படும், அப்போது 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை பெறும் போது அது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்திய வர்த்தகச் சந்தையில் கடந்த சில வருடங்களாகவே ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு ஏற்றார்போல் இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரி வரும் காரணத்தால் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
100 சதவீதம் வளர்ச்சி
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் டிஜிட்டல் சந்தையில் இன்னும் 100 சதவீதம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற இந்தியாவில் வாய்ப்பு உள்ளது. இன்னும் 2ஆம், 3ஆம் தர நகரங்கள், கிராமங்களில் டிஜிட்டல் சேவையின் பயன்பாடு பெரிய அளவில் வளரவில்லை.
சீன முதலீடுகள்
இந்தச் சூழ்நிலையில் தான் மத்திய அரசு சீன முதலீடுகளுக்கும், சீன முதலீட்டாளர்களும் அதிகப்படியான தடையை விதித்துள்ள நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா முதலீட்டாளர்களுக்கு இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தனர்.
2020 மற்றும் 2021
மேலும் 2020 கொரோனா தொற்றுக் காலத்தில் வென்சர் கேப்பிடல் மற்றும் முதலீடுகள் மிகவும் மந்தமாக இருந்த வேளையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் புதிய முதலீடுகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே அதிகளவிலான முதலீடுகள் குவியத் துவங்கியது.
43 நிறுவனங்கள்
இதன் எதிரொலியாகச் சுமார் 43 நிறுவனங்கள் 2021ல் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்று யூனிகாரன் நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் மொத்தமாகவே 30 யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இருந்ததாக அறியப்படுகிறது.
முன்னணி முதலீட்டு நிறுவனங்கள்
இதன் படி 2021ல் யூனிகார்ன் நிலையை அடைந்த 43 நிறுவனத்தில் முன்னணி முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் 20 நிறுவனத்திலும், சிகோயா 15 நிறுவனத்திலும், ஏசல் 14 நிறுவனத்திலும், எலிவேஷன் 6 நிறுவனத்திலும், சாப்ட்பேங்க் 7 நிறுவனத்திலும், முதலீடு செய்துள்ளது. இதைத் தவிரப் பல முதலீட்டு நிறுவனங்கள் புதிதாக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீதர் வேம்பு
இதைப் பார்த்த சென்னை ப்ராடெக்ட் நிறுவனமான zoho நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு தனது டிவிட்டரில் முதலீட்டுக் குமிழிகளின் (investment bubbles) வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இது கவலையடையச் செய்ய விஷயமாகவே இருக்கும் எனத் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications