இந்த வாரம் இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் விமானப் போக்குவரத்துக்கு பெரிய தடை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த செய்தி பயணிகளிடம் மிகுந்த பதட்டத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏன் விமான நிலையங்கள் மூடப்பட்டன?: இந்த நடவடிக்கையின் பின்னணியில் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை நோக்கி இந்திய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் மட்டும் 147 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. FlightRadar24 எனும் உலகளாவிய விமான கண்காணிப்பு நிறுவன அறிவிப்பில், பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளிலிருந்து குஜராத் வரை இந்தியாவின் மேற்கு வான்வெளியில் பயணிகள் விமானங்கள் வெறிச் சோடியதாக இருந்தது. விமானங்கள் பாதுகாப்பு காரணங்களால் அந்த வழிகளைத் தவிர்த்தன என தெரிவித்தது. இதன் விளைவாக பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன அல்லது முழுமையாக ரத்து செய்யப்பட்டன.
மூடப்பட்ட முக்கியமான விமான நிலையங்கள்: ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், அமிர்தசரஸ், ஜோத்பூர், லூதியானா, பதிண்டா, ஹல்வாரா, பாட்டியாலா, புந்தர், சிம்லா, தர்மசாலா, முந்த்ரா, ஜாம்நகர், புஜ், ராஜ்கோட், போர்பந்தர், கிஷன்கர், பிகானேர், கண்ட்லா, குவாலியர், ஹிண்டன் மற்றும் கேஷோத் ஆகியவை மற்றும் இவை பல்வேறு மாநிலங்களில் உள்ளன: ஜம்மு-காஷ்மீர், லடாக், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி NCR ஆகிய பகுதிகளில் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: வியாழக்கிழமை மட்டும் 430 விமானங்கள் இந்திய விமான நிறுவனங்களால் ரத்து செய்யப்பட்டன. புதன் கிழமையிலும் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி, அமிர்தசரஸ் போன்ற நகரங்களில் விமானங்களை திருப்பியதும், பயணிகள் குழப்பத்தில் ஆழ்த்தியது.
விமான நிறுவனங்கள் எச்சரிக்கை: பல விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளை எச்சரித்து உள்ளன. முக்கியமாக, இண்டிகோ - ஸ்ரீநகர், ஜம்மு, லே, சண்டிகர், தர்மசாலா ஆகிய நகரங்களுக்கு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. பயணிகள் விமான நிலையத்திற்கு செல்லும் முன் விமான நிலையை சரிபார்க்குமாறு அறிவுறுத்தியது. ஏப்ரல் 22க்கு முன் முன்பதிவு செய்த பயணிகளுக்கு மே 22 வரை முழு ரத்து/மாற்றம் கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.
ஏர் இந்தியா: மே 7 வரை ஜம்மு, லே, சண்டிகர், ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வரும்/போகும் விமானங்களை முழுமையாக ரத்து செய்தது. அதன் குறைந்த கட்டண பிரிவான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகளை வலைத்தளத்தில் நேரடி தகவல்களைப் பார்க்கும் படி ஊக்குவித்தது. ஸ்பைஸ்ஜெட் - தர்மசாலா, ஜம்மு, லே, ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.
ஆகாசா ஏர்:பாதிக்கப்பட்ட நகரங்கள் பற்றிய முழு பட்டியல் வெளியிடவில்லை. பயணிகள் தங்களது முன்பதிவுகளை மற்றும் விமான நிலையை வலைத்தளம் அல்லது ஹெல்ப்லைன் மூலம் புதுப்பித்து தெரிந்து கொள்ள கேட்டுக்கொண்டது. அமிர்தசரஸ் செல்லும் 2 சர்வதேச விமானங்கள் டெல்லிக்கு திருப்பப்பட்டன. அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்லி-நியூயார்க் விமான சேவையை ரத்து செய்தது. பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வழியாக செல்லும் பயணங்களை மற்ற பாதுகாப்பான வழிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளன.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: இந்த சூழ்நிலையில் பயணிகள், விமான நிலையத்திற்கு செல்லும் முன் விமான நிலையை சரிபார்க்க வேண்டும். தங்கள் விமான நிறுவனம் வழங்கும் உதவி மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். தாமதம், மாற்றம் அல்லது ரத்து போன்றவைக்கு தயாராக இருக்க வேண்டும். விமான நிறுவனங்களின் எக்ஸ் வலைத்தளம், ஹெல்ப்லைன் எண்கள் ஆகியவற்றின் மூலம் நேரடி தகவல்களைப் பெறலாம்.
இந்த வகையான பாதுகாப்பு காரணங்களால் ஏற்படும் தற்காலிக விமான தடை நடவடிக்கைகள் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. தற்போது சூழ்நிலை மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் மன அமைதியுடன் இருக்க வேண்டும். மேலும் தங்கள் விமான நிறுவனங்களிடமிருந்து நேரடி தகவல்களை பெற்று பயண திட்டங்களை திட்டமிட வேண்டியது அவசியமாக இருக்கிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications