மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து மீண்டும் ரயில்வே பயண இன்ஸ்சூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்துள்ளது. எல்லா பயணிகளின் டிக்கெட் கட்டணத்தில் சேர்ப்பது மீண்டும் கட்டாயமாக்குப்படும் என கருத்து நிலவுகிறது.
ஒவ்வொரு ரயில் டிக்கெட் வாங்கும்போதும் இன்சூரன்ஸ்கான பணம் சேர்த்து வாங்கப்படும். ரயில் பயணத்தின் போது ஏதாவது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு தருவதற்கு இது உதவும்.

ஆனால் இன்சூரன்ஸ் பண வசூலில் எவ்வளவு ஆனது என்றும் அதில் எவ்வளவு இழப்பீடு தரப்பட்டது பற்றி இங்கு பார்க்கலாம்.
ஒவ்வொரு டிக்கெட்டிலும் 45 பைசா பிரீமியமாக ஐஆர்சிடிசி வசூலிக்கிறது. இதன் மூலம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும். பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த காப்பீடை ஐஆர்சிடிசி பெறுகிறது. விபத்துகள் நடந்தால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடை தருகின்றன.
2016-17 நிதியாண்டில் பயணிகளின் இன்சூரன்ஸுக்காக 11 கோடி ரூபாயை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பெற்றன. அதில் 76 லட்சம் மட்டுமே இழப்பீடாக தந்துள்ளன.
2017-18 நிதியாண்டில் இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.38.54 கோடி வழங்கப்பட்டது. இதில் ரூ.3.59 கோடி இழப்பீடாக தரப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பயணிகளிடமிருந்து பிரீமியம் பெறப்படவில்லை. அதை ஐஆர்சிடிசி செலுத்தியது.
அதன் பின்னர் 2018-19 நிதியாண்டில் பயணிகளிடமிருந்து ரூ.8.53 கோடி இன்சூரன்ஸ் பிரீமியம் வசூலிக்கப்பட்டு அதிலிருந்து ரூ.6.12 கோடி இழப்பீடாகத் தரப்பட்டது.
2019-20 நிதியாண்டில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ரூ.12.71 கோடி பிரீமியம் பெற்றது. இதில் ரூ.3.53 கோடி இழப்பீடாகத் தரப்பட்டது.
ரயில் இன்சூரன்ஸ் மூலம் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும், பகுதி செயலிழப்புக்கு ரூ.7.5 லட்சமும், ரூ.2 லட்சம் மருத்துவமனை செலவுகளுக்காகவும் தரப்பட்டது.
ரயில் இன்சூரன்ஸ் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு துரதிர்ஷ்டவசமாக ஏதாவது காயம் அல்லது இறப்பு ஏற்பட்டால் உடனடியாக இந்த காப்பீடு அளிக்கப்படுகிறது.
ரயில் இன்சூரன்ஸுக்காக 45 பைசாக்களை வசூலிக்கும் இந்திய ரயில்வேக்கு இதுவரை பல கோடி ரூபாய் வருமானமாக வந்துள்ளது.
இந்த நிலையில் பயணிகள் பாதுகாப்புக்காக அனைத்து வகை நடவடிக்கைகளையும் இந்திய ரயில்வே செய்து தர வேண்டும் என்று பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து வலியுறுத்தப்படுகிறது.
story written by: Jayachandran
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications