இந்திய வர்த்தகச் சந்தையில் இதுவரையில் எந்தொரு நிறுவனமும் எதிர்கொள்ளாத கடுமையான பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டது. ஹிண்டன்பர்க் விகாரத்தில் மட்டுமே சுமார் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை அதானி குழுமம் இழந்தது, ஆனால் கடந்த 2 வாரத்தில் அடுத்தடுத்து வந்த 2 இரு அறிவிப்புகள் அதானி குழுமத்தின் தலையெழுத்தை மாற்றியுள்ளது.
இதன் வாயிலாகக் கௌதம் அதானி மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தைத் துவங்கியுள்ளார், அதானி குழுமம் அடுத்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் பிரச்சனையில் இழந்ததை எவ்வளவு வேகமாக மீட்டுக் கொண்டு வர முடியுமோ அதைச் செய்துள்ளது.

இதேபோல் இந்த முதலீடு இக்குழுமத்தின் அனைத்து நிறுவனங்களிலும் இருந்தாலும், தற்போது ஐந்து நிறுவனங்கள் முக்கியக் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் 2070 ஆம் ஆண்டுக்குள் அதானி குழுமம் 5 முக்கியமான நிறுவனத்தில் கார்பன் வெளியேற்றத்தை நெட் ஜீரோ இலக்கை அடைய உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகளவில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அதிகப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வேளையிலும், வெளிநாட்டு பெரும் முதலீட்டாளர்கள் நெட் ஜீரோ இலக்கை நோக்கிப் பயணிக்கும் நிறுவனத்தில் அதிகப்படியான முதலீடும் செய்யும் நிலை தற்போது உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் தனது வர்த்தகத்தில் அதிகப்படியாகக் கிரீன் எனர்ஜியை பயன்படுத்துவதற்கு மாற முடிவு செய்துள்ளது.
அதானி குழுமத்தின் துறைமுகங்கள், எரிசக்தி, சிமெண்ட் மற்றும் மின்சாரம் எனப் பல துறையில் முன்னிலையில் இருக்கும் அதானி குழுமம், 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியன் மரங்களை நடுவதற்கு உறுதியளித்துள்ளதாக இக்குழுமம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ, ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை 2050ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் இருந்து விடுபட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தில் நெட் ஜீரோ அளவை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதனால் இந்த 5 நிறுவனங்களும் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் அதானி குழுமம் தனது போக்குவரத்து சேவைக்காக ஹைட்ரஜென் பியூயல் செல் மூலம் இயங்கும் கனரக வாகனங்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது, இதற்காக அசோக் லேலாண்ட் மற்றும் பலார்ட் பவர் ஆகிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது அதானி குழுமம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications