ஆகஸ்ட் மாதம் முடிவடைந்து இன்று முதல் செப்டம்பர் தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
செப்டம்பர் 1 முதல் கேஸ் விலை குறைவு, சுங்கக்கட்டணம் அதிகரிப்பு ஆகிய மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு இந்தியரின் பொருளாதாரத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று முதல் ஏற்பட்டுள்ள ஐந்து முக்கிய மாற்றங்கள் என்னென்ன? அதனால் ஏற்படும் லாப நஷ்டங்கள் என்னென்ன? என்பதை தற்போது பார்ப்போம்.
1. தேசிய ஓய்வூதியத் திட்டம்
செப்டம்பர் 1 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு பாயின்ட் ஆஃப் பிரசன்ஸ்-க்கு கமிஷன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு PoP மூலம் மட்டுமே பதிவு மற்றும் இதர வசதிகள் செய்யப்படும். இன்று முதல் பிஓபிக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை கமிஷன் வழங்கப்படும்.
2. சுங்கவரி உயர்வு
இன்று முதல் அதாவது செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 28 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. இன்று முதல் சுங்கக்கட்டணம் அனைத்து வகை வாகனங்களுக்கும் ஒரு கிமீக்கு 10 காசு முதல் 52 காசு வரை அதிகரித்துள்ளது. இதனால் வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் செலவாகும்.
3. வீடுகளின் விலை உயர்வு
செப்டம்பர் 1-ம் தேதி காசியாபாத் நில வட்ட விகிதம் அதிகரித்துள்ளதால், நீங்கள் ஒரு வீட்டை வாங்க விரும்பினால், அதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும் இன்று முதல் பல நகரங்களின் நில வட்ட விகிதம் வரும் ஆண்டுகளில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு KYCஐ புதுப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 என நிர்ணயம் செய்து இருந்தது. எனவே இதுவரை உங்கள் KYCஐப் புதுப்பிக்கவில்லை என்றால், இன்று முதல் உங்கள் கணக்கு முடக்கப்படலாம். எனவே பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை இயக்கும் போது பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
5. காப்பீட்டுக் கொள்கை
இன்று முதல் அதாவது செப்டம்பர் 1 முதல் உங்கள் காப்பீட்டின் பிரீமியம் குறைக்கப்படும். பொது காப்பீட்டு விதிகளில் ஐஆர்டிஏ செய்த மாற்றங்களை பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது காப்பீட்டு முகவருக்கு 20% கமிஷன் மட்டுமே செலுத்த வேண்டும். IRDA செய்த மாற்றங்களுக்குப் பிறகு பிரீமியம் குறைக்கப்படும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications