அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனையானது மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது எனலாம்.
ஏற்கனவே அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனையால், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த காலகட்டத்தில் பல பிரச்சனைகள் வெடித்தது. பல கட்ட வர்த்தக தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் இது உலகளாவிய பிரச்சனையாக மாறும் என சர்வதேச நிபுணர்கள் எச்சரித்து இருந்தனர்.
இந்த நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, இப்பிரச்சனைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்தன.
பல பிரச்சனைகள்
எனினும் அந்த காலகட்டத்திலேயே சீனா மீது பல்வேறு வர்த்தக தடைகள், சீன நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை, சீன ஆப்களுக்கு தடை, பங்கு சந்தையில் இருந்து டீலிஸ்ட் என பல நடவடிக்கைகள் இருந்தன. இப்படி பல பிரச்சனைகளுக்கு தற்போது தான் சுமூக நிலை ஏற்பட ஆரம்பித்தது. எனினும் அமெரிக்கா தாய்வானுக்கு சப்போர்ட் செய்யும் நிலையில், அதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரித்தது.
மீண்டும் தடையா?
சீனாவின் இத்தகைய மிரட்டல்கள் வந்த சில வாரங்களில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. அப்படி என்ன நடவடிக்கை, இதனால் சீனாவுக்கு என்ன பிரச்சனை வாருங்கள் பார்க்கலாம். சீனாவின் முன்னணி எரிசக்தி நிறுவனம் உள்பட, அரசுக்கு சொந்தமான 5 சீன நிறுவனங்கள், அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து இம்மாத இறுதிக்குள் நீக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நிறுவனங்கள்
சீனா லைஃப் இன்சூரன்ஸ், பெட்ரோ சீனா, சினோபெக், அலுமினியம் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா மற்றும் சினோபெக் ஷாங்காய் பெட்ரோகெமிக்கல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த லிஸ்டில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 5 நிறுவனங்களும் தான் NYSEல் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
என்ன காரணம்?
இது அமெரிக்காவில் குறைந்த டர்ன்ஓவர் மற்றும் அதிக நிர்வாக சுமை மற்றும் அதிக செலவுகள் என பல பிரச்சனைக்கு மத்தியில் தான் இந்த நிறுவனங்கள் வெளியேறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சீனா செக்யூரிட்டி கண்காணிப்பு குழுவான சீனா செக்யூரிட்டீஸ் ரெகுலேட்டரி கமிஷன், நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதும், அதில் இருந்து வெளியேறுவதும் இயல்பானது என்று தெரிவித்துள்ளது.
தணிக்கை பிரச்சனை
அமெரிக்க கண்காணிப்பு குழுவினை 3 ஆண்டுகளுக்கு தணிக்கை செய்ய அனுமதிக்க தவறினால், நிறுவனங்களை பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற முடியும் என விதியானது அமெரிக்காவில் உண்டு.
ஆனால் சீனா தொடர்ந்து பல ஆண்டுகளாக தங்களது நிறுவனங்களின் மீதான அமெரிக்க தணிக்கையை நிராகரித்து வருகிறது. இந்த சூழலில் தான் இந்த 5 நிறுவனங்களும் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட திருத்தம்
இதற்காக சட்ட திருத்தம் கொண்டு வர ஏற்கனவே சீனா மொழிந்துள்ளது. இந்த திருத்தம் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களை ஆய்வு செய்ய அமெரிக்க கட்டுப்பாட்டாளர்களை அனுமதிக்கும். எனினும் தற்போதைக்கு இது அமலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications