இந்திய பங்குச் சந்தை கடந்த ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிட்ட நாளில் பெரும் சரிவை சந்தித்தது. இதேவேளையில் ஜூன் 3ஆம் தேதி எக்சிட் போல் பிஜேபி-க்கு சாதகமாக இருந்த காரணத்தால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்தனர்.
ஆனால் அடுத்த நாள் தேர்தல் முடிவுகளில் பிஜேபி பெரும்பான்மையை இழந்து கூட்டணியில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனால் ஜூன் 4 ஆம் தேதி சென்செக்ஸ் வரலாறு காணாத விதமாக 6100 புள்ளிகள் வரையில் சரிந்தது.

இதன் காரணமாக, 5 கோடிக்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் சுமார் ரூ.30 லட்சம் கோடி வரை இழப்பைச் சந்தித்ததாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
முதலீட்டாளர்கள் ரூ.30 லட்சம் கோடியை இழக்க மிக முக்கியமான காரணம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்துத் தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் கொடுத்த ஆலோசனைகளைக் குறித்து ராகுல் காந்தி சரமாரியாகக் கேள்வி எழுப்பி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி 4 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்:
1. பங்குச் சந்தை முதலீடு குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஏன் ஆலோசனை வழங்க வேண்டும்? பொதுவாக, பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தனிப்பட்ட நிதியியல் முடிவு. இது குறித்து நிபுணர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால், அரசியல் தலைவர்கள் இது போன்ற முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது பொருத்தமானதா என்ற கேள்வி எழுப்பினார்.
2. பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் இருவரும் ஒரே ஊடக நிறுவனத்திற்கே ஏன் பேட்டி அளித்தனர்? குறிப்பாக, இந்த ஊடக நிறுவனம் செபி (SEBI) விசாரணையில் உள்ள அதே தொழில் குழுமத்தைச் சேர்ந்தது. அந்த குழுமம் பங்குச் சந்தையை ஏமாற்றியதாகச் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது, கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
3. பாஜக கட்சிக்கும், போலி எக்சிட் போல் வாக்கு எண்ணிக்கைக்கும் , சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது? எக்சிட் போல் வாக்கு எண்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்த இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் லாபம் ஈட்டியுள்ளனர். அதே நேரத்தில், 5 கோடி குடும்பங்கள் இழப்பு அடைந்துள்ளன. இதற்குப் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
4. இந்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC - Joint Parliamentary Committee) விசாரணை கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சரிவில் நடந்த முறைகேடுகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இப்படி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து தேர்தலுக்கு முன்பு அளித்த பேட்டியில் என்ன கூறினார்கள் தெரியுமா..?
அதானி குழுமத்திற்கு சொந்தமான NDTV தொலைக்காட்சியில் இந்த மோடி மற்றும் அமித் ஷா பேட்டி ஓளிப்பரப்பு செய்யப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications