இன்று முதல் ஏற்படப்போகும் 5 புதிய மாற்றங்கள்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன விளைவுகள் இருக்கும்?

செப்டம்பர் 2024 தொடங்கும்போது, LPG சிலிண்டர் செலவுகள் முதல் புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகள் வரையிலான பல முக்கிய மாற்றங்கள் நிகழ உள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது உங்கள் பட்ஜெட்டை மிகவும் திறமையாக நிர்வகிக்கவும், எதிர்பாராத நிதி சவால்களைத் தவிர்க்கவும் உதவும். இந்த மாதம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டிய 5 முக்கிய மாற்றங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆதார் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இலவச ஆதார் புதுப்பிப்புகளுக்கான காலக்கெடுவை செப்டம்பர் 14, 2024 வரை நீட்டித்துள்ளது. இந்த நீட்டிப்பு ஆதார் வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் முகவரி விவரங்களை துல்லியமாக வைத்திருக்க உதவும். வங்கி, அரசு திட்டங்கள் மற்றும் மொபைல் இணைப்பு போன்ற முக்கியமான சேவைகளுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதால், ஆதாரை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். எனவே தேவைப்படுபவர்கள் இந்த காலக்கெடுவுக்குள் மாற்றங்களை செய்து கொள்ளலாம். அப்படி இல்லை எனும் பட்சத்தில் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.

 இன்று முதல் ஏற்படப்போகும் 5 புதிய மாற்றங்கள்.. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன விளைவுகள் இருக்கும்?

LPG சிலிண்டர் விலை ஏற்றம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் மாறுதலுக்கு ஏற்ப சிலிண்டரின் விலையை OMC நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் அறிவிக்கும். அதன்படி தற்போது கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுள்ள வணிக LPG சிலிண்டர்களின் விலையை OMC நிறுவனங்கள் 39 ரூபாய் உயர்த்தியுள்ளன. இதனால், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லியில் ரீடைல் சந்தையில் சிலிண்டர்களின் விலை 1,691.50 ஆக உயர்ந்துள்ளது.

ATF மற்றும் CNG-PNG கட்டணங்களில் மாற்றம்: செப்டம்பர் 1, 2024 முதல், விமான எரிபொருளான ATF மற்றும் CNG-PNG ஆகியவற்றின் விலைகளில் திருத்தங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் போக்குவரத்துச் செலவுகளைப் பாதிக்கும். மேலும் விமானப் பயணம் செய்பவர்களுக்கு கணிசமான விளைவை ஏற்படுத்தலாம். CNG-PNGயை தங்கள் வாகனங்களுக்கு பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த விலை மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

மோசடி அழைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள்: மோசடி அழைப்புகள் மற்றும் ஸ்பேம் மெசேஜ்களின் பிரச்சனையை எதிர்த்து, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) செப்டம்பர் 1, 2024 முதல் புதிய நடவடிக்கைகளை செயல்படுத்துகிறது. அதில் ஒரு முக்கிய மாற்றம், மார்க்கெட்டிங் சேவைகளை பிளாக்செயின் அடிப்படையிலான அமைப்புக்கு படிப்படியாக மாற்ற இருக்கிறது. இது பாதுகாப்பை மேம்படுத்துகிறது மற்றும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளின் அளவைக் குறைக்கிறது. தொலைத்தொடர்பு தொடர்பான மோசடியிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க இந்த முயற்சி எடுக்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றங்கள்: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் HDFC பேங்க் கிரெடிட் கார்டுகளில் சில புதிய விதிகள் அமல்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் யூட்டிலிட்டி பேமண்ட்களில் இருந்து பெறப்படும் ரிவார்டு பாயிண்டுகளுக்கு வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாதத்திற்கு 2000 ரிவார்டு பாயிண்டுகள் வரை மட்டுமே ஒருவர் பெற முடியும். இந்த வரம்பு குறிப்பிட்ட செலவு வகைகளில் ரிவார்டுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.

டெலிகாம் மற்றும் கேபிள் பரிவர்த்தனை ரிவார்ட் லிமிட்: HDFC பேங்க், டெலிகாம் மற்றும் கேபிள் பேமெண்ட்டுகளுக்கான ரிவார்டு பாயிண்டுகளின் வரம்பை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த பரிவர்த்தனைகள் மூலம் மாதத்திற்கு அதிகபட்சம் 2,000 ரிவார்ட் பாயிண்டுகள் வரை மட்டுமே வழங்கப்படும். பல்வேறு செலவுகளில் சமமான கிரெடிட் கார்டு பயன்பாட்டை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

IDFC FIRST பேங்க் தனது கிரெடிட் கார்டு கட்டண விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணத் தொகை (MAD) மற்றும் கட்டண தேதி மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இந்த மாற்றங்கள் செப்டம்பர் 2024 முதல் நடைமுறைக்கு வரும் என்று IDFC FIRST பேங்க் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+