ஊழியர்களுக்கான உலகின் மிகப்பெரிய சமுக வலைதளமாக இருக்கும் லிங்க்டுஇன் தளத்தில் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களின் பர்சனல் சேட்டா திருடப்பட்ட டார்க் வெப் தளத்தில் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டு உள்ளது. 50 கோடி வாடிக்கையாளர்கள் என்பது லிங்க்டுஇன் தளத்தின் மொத்த வாடிக்கையாளர்களில் 3ல் 2 பங்காகும்.
விற்பனைக்குப் போடப்பட்டு உள்ள தரவுகளில் 50 கோடி பயனர்களின் பெயர், ஈமெயில், போன் நம்பர், வேலை செய்யும் நிறுவனத்தின் தரவுகள், சமூக வலைத்தள இணைப்புகள் எனப் பல முக்கியத் தரவுகள் விற்பனை செய்யப்பட உள்ளதாகச் சைபர் நியூஸ் இந்தத் தகவல் திருட்டை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் தகவல் திருட்டுக் குறித்துப் பெரும் அதிர்ச்சியை அளித்த நிலையில் தற்போது லின்க்டுஇன் தளத்தில் ஏற்பட்டு உள்ள தகவல் திருட்டு மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தகவல் திருட்டு குறித்து லிங்க்டுஇன் ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. 50 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்களை ஹேக்கிங் செய்து திருடப்படவில்லை, இதற்கு மாறாகப் பாட்ஸ் (Bots) உபயோகித்துத் தளத்தில் இருக்கும் தகவல்கள் சுறண்டப்பட்டு உள்ளது என்று லிங்க்டுஇன் தெரிவித்துள்ளது. மேலும் லிங்க்டுஇன் தளத்தில் முறையற்ற வகையில் நுழைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது, இதன் மூலம் லிங்க்டுஇன் தளம் பாதுகாப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
பாட்களைப் பயன்படுத்தித் தளத்தில் publicly viewable data பிரிவில் இருக்கும் தரவுகள் மட்டுமே தற்போது திருடப்பட்டு உள்ளது எனவும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ளவும் முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளது லிங்க்டுஇன்.