இந்தியாவின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நாடுமுழுவதும் ஏற்பட்டு உள்ள ஆக்சிஜன் தேவையை உணர்ந்து தனது தொழிற்சாலைகளில் கொரோனா பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் வாயுவைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் ஜின்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனத்தின் தலைவரான நவீன் ஜின்டால் தனது டிவிட்டரில் 500 டன் திரவ நிலையில் ஆக்சிஜன் தயாராக ஒடிசா அன்குள் பகுதியில் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது மட்டும் அல்லாமல் மத்திய பிரதேச மாநில அரசிடம் பேசி, தினமும் எங்களது ராய்கர் தொழிற்சாலையில் இருந்து போதுமான ஆக்சிஜன்-ஐ விநியோகம் செய்து வருகிறோம் எனவும் நவீன் ஜின்டால் தனது
டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் தினமும் 100 டன் ஆக்சிஜனை எந்த மாநிலத்திற்கு வேண்டும் என்றாலும் எங்களால் அனுப்ப முடியும். மேலும் தெலுங்கான, ஆந்திரா பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பத் தத்தம் மாநில அரசிடம் உறுதி அளித்துள்ளோம் என நவீன் ஜின்டால்.

கடைசியாக நவீன் ஜின்டால் நிறுவனத்தால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளோம் எனவும், விரைவில் இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலை மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது ரிலையன்ஸ், ஜின்டால் உட்படப் பல தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் வாயுவை உற்பத்தி செய்து நாடு முழுவதும் விநியோகம் செய்து வருகிறது. ஆனாலும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ள மக்களுக்குப் போதுமானதாக இல்லை.
மேலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அதனைத் தேவையான இடத்தில் கொண்டு சேர்ப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும் காரணத்தால் பிரதமர் மோடி ரயில் சேவை முதல் விமானப் போக்குவரத்து சேவை வரையில் அனைத்தையும் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் பயண நேரம் பெரிய அளவில் குறையும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications