இந்தியர்களுக்கும், இந்தியர்களின் திறமைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு உள்ளது என்பதை நிருப்பிக்க இந்த ஒரு ஆய்வறிக்கை போதும். இந்திய மண்ணில் இருந்து சென்று உலகில் சுமார் 11 நாடுகளில் 58 இந்தியர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள்.
அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்படும் Indiaspora என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுகள் இந்தியர்களுக்கும் மட்டும் அல்லாமல் பல நாடுகளையும் அதிர்ச்சி அளித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியர்கள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 58 இந்தியர்கள் அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், பிரிட்டன் உட்பட 11 நாடுகளில் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் இருப்பதாகவும், இவர்கள் தலைமை வகிக்கும் நிறுவனத்தில் சுமார் 36 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் இந்த 58 இந்தியர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களின் மொத்த வருவாய் 1 டிரில்லியன் டாலர், நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 4 டிரில்லியன் டாலர் என Indiaspora ஆய்வறிக்கை கூறுகிறது.
10 சதவீதம்
மேலும் இந்த 58 இந்தியர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்கள் வருடத்திற்குச் சராசரியாக 23 சதவீத லாபத்தையும், அமெரிக்காவின் S&P 500 பிரிவில் சிறந்து விளங்கும் நிறுவனங்களில் 10 சதவீதம் இவர்களின் கையில் தான் உள்ளது என்றும் Indiaspora ஆய்வறிக்கை கூறுகிறது.
எம்ஆர் ரங்கசுவாமி
சர்வதேச வர்த்தகச் சந்தையில் இந்தியர்களின் ஆதிக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது, இதை அறிந்துகொண்ட பின்பு தான் Indiaspora என்கிற அமைப்பைத் துவங்கினோம். மேலும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களில் தலைமை வகிக்கும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்றும், இந்தியாவையும், உலகையும் நல்ல வழியில் மாற்றும் முக்கியச் சக்தியாக இந்தியர்கள் இருக்கும் வேண்டும் என்று Indiaspora அமைப்பின் நிறுவனர் எம்ஆர் ரங்கசுவாமி தெரிவித்துள்ளார்.
டெக் துறை மட்டுமல்ல
இந்தியர்கள் டெக் துறையில் மட்டும் தான் சிறந்து விளங்குகின்றனர் என்பது இந்த 58 இந்தியர்களின் சாதனை உடைந்துள்ளது. இந்தியர்கள் டெக் துறையில் மட்டும் அல்லாமல் வங்கியியல், எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் பொருட்கள், கண்சல்டிங் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.
5 பெண்கள்
Fortune 500 நிறுவன பட்டியலில் வெறும் 61 பெண் தலைவர்கள் மட்டுமே இருப்பது போல் இந்த 58 இந்தியத் தலைவர்கள் பட்டியலில் 5 பெண் தலைவர்கள் மட்டுமே உள்ளனர்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications