இந்திய டெலிகாம் சந்தையை தலைகீழாக மாற்றப்போகும் 5ஜி சேவையை அளிக்க அனைத்து டெலிகாம் சேவை நிறுவனங்களும் தயாராக இருக்கும் நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்காகக் காத்திருந்தது.
மத்திய அரசு ஏலம் நடத்துவதற்கான சரியான காலகட்டத்தைத் தேடி வந்த நிலையில் நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்தது, இந்நிலையில் இன்று மக்களவையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்துவதற்கான ஒப்புதலை அளித்தது.
நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் இருந்த மத்திய அரசு ஒப்புதல் அளித்தாலும் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் சோகத்தில் தான் உள்ளது ஏன் தெரியுமா..?!
5ஜி அலைக்கற்றை
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் சோகத்தில் உள்ளது. புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தின் (NIA) படி, 5G அலைக்கற்றைகளின் இருப்பு விலையை அமைச்சரவை மாற்றவில்லை.
நிதி நெருக்கடி
5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஜூலை இறுதியில் துவங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களும் அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருக்கும் காரணத்தால் தான் கட்டணத்தை அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது.
கோரிக்கை
இந்நிலையில் 5ஜி அலைக்கற்றைக்கான விலை அதிகமாக இருந்தால் மீண்டும் தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்கள் கடன் மற்றும் நிலுவைத் தொகை சுமையில் தள்ளப்படும் என்ற நிலை உள்ளது. இதை முன்கூட்டியே சுதாரித்து டெலிகாம் நிறுவனங்கள் மத்திய டெலிகாம் துறையிடம் முக்கியமான கோரிக்கையை வைத்தது.
விலை குறைப்பு
அலைக்கற்றைகளின் இருப்பு விலையை 2018 இல் இருந்து 90% குறைக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் டிராய் தனது பரிந்துரைகளில் ஆகஸ்ட் 2018 பரிந்துரைக்கப்பட்ட விலைகளை விட 39% மட்டுமே குறைத்துள்ளது.
72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை
இதற்கிடையில், 20 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் மொத்தம் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை விற்பனைக்கு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. இதில் 600 மெகா ஹெர்ட்ஸ், 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2300 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் பேண்டுகள் கீழ் ஸ்பெக்ட்ரம் ஏலம் நடத்தப்படும்.
சி-பேண்ட் விலை
பிரீமியம் 3.3-3.67 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் (சி-பேண்ட்) ஒரு யூனிட் ரூ.317 கோடி அடிப்படை விலையாக ஏப்ரல் 11 அன்று டிராய் நிர்ணயம் செய்து பரிந்துரை செய்தது. இது 2018ஆம் ஆண்டு அளவீட்டை விடவும் 36 சதவீதம் குறைவாகும்.
மாற்றமில்லை
இதேபோல் 700 மெகாஹெர்ட்ஸ் விலை 40 சதவீதம் குறைந்து 3,297 கோடி ரூபாய்க்கு நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்தது. இந்த விலை மேலும் குறைக்க டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் அறிவிப்பு அழைப்பு விண்ணப்பத்தில் (NIA) எவ்விதமான மாற்றத்தையும் செய்யவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications