வருமான வரி தாக்கல் செய்பவரா நீங்கள்.. மறந்தும் இந்தத் தவறை செஞ்சிடாதீங்க!

சென்னை: வரி செலுத்துவது நம் ஜனநாயக கடமை. ஆனால், வரி செலுத்தும் போது சில தவறுகளை செய்வது, தேவையில்லாமல் அதிக வரி செலுத்தி விடுவதற்கு வழிவகுத்துவிடும். இந்த கட்டுரையில், வருமான வரித் தாக்கல் செய்யும் போது பொதுவாக செய்யப்படும் 6 தவறுகளை பற்றியும், அவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களாக இருந்தால் அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். இதுபோன்ற வரி செலுத்தும் நபர்கள் அவர்களுக்கே தெரியாமல் செய்யும் சில தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வருமான வரி தாக்கல் செய்பவரா நீங்கள்.. மறந்தும் இந்தத் தவறை செஞ்சிடாதீங்க!

வரி விலக்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது: வரி செலுத்துபவர்கள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரி விலக்கு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரிவு 80சி-இன் கீழ், சில முதலீட்டு திட்டங்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கின்றன. இதில் PPF, ELSS, NSC, EPF போன்ற திட்டங்கள் அடங்கும்.

இந்த வாய்ப்புகளை கவனிக்காமல் இருப்பது அல்லது அவற்றின் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது வரி சேமிப்பு வாய்ப்புகளைத் தவறவிடுவதற்கும், அதிக வரி செலுத்தவும் வழிவகுக்கும். எனவே, வரி செலுத்துபவர்கள் இந்த வரி சேமிப்பு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) விலக்கு: சம்பளம் பெறும் தனிநபராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியாக வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கிடைத்தால், நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாடகைக்கு வரி விலக்கு கோரலாம். வாடகை ரசீதுகளை சமர்ப்பிக்கத் தவறினாலோ அல்லது ஆவணங்களை வழங்கத் தவறினாலோ, இந்த வரி சேமிப்பு வாய்ப்பை இழக்க நேரிடும்.

மருத்துவக் காப்பீடு பிரீமியங்களைத் தவிர்த்தல்: தனிநபர், மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கான மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்காக செலுத்தப்படும் பிரீமியங்கள், 80D பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியுடையவை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாதவர்கள், அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும் . கூடுதலாக, மூத்த குடிமக்கள் இந்த பிரிவின் கீழ் அதிக வரி விலக்கு பெற தகுதியுடையவர்கள்.

NPS திட்டத்தின் நன்மைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது: NPS திட்டத்திற்கு அளிக்கப்படும் பங்களிப்புகள் பிரிவு 80CCD(1B) இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியுடையவை.

தாமதமாக வரித் தாக்கல் செய்தல்: கடைசி தேதியைக் கடந்து தாமதமாக தாக்கல் செய்தால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிக்கு முன்பே தாக்கல் செய்துவிடுவது நல்லது.

வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறுகளைச் செய்வது: வருமான வரி தாக்கல் செய்யும் போது தவறுகள் இருந்தால், வரித்துறை அதிகாரிகளிடம் இருந்து விசாரணைக்கு ஆளாக நேரிடும். மேலும், கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, வருமான வரி தாக்கல் செய்யும் போது எந்த தவறுகளும் இல்லாமல் சரியாக தாக்கல் செய்வது அவசியம்.

வரி செலுத்துவது கடினமான பணி அல்ல. சரியான திட்டமிடல் மற்றும் வரி விதிமுறைகளைப் பற்றிய அடிப்படை அறிவு இருந்தால், வரி செலுத்தும் போது செய்யும் தவறுகளைத் தவிர்த்து, வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+